ரூ. 35 லட்சத்தில் தடுப்புச் சுவர் இல்லாத கழிப்பறையா? இதுதான் திமுக ஆட்சியின் அவலம் - முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் கொந்தளிப்பு! Toilet Without Partitions for ₹35 Lakh? This is the Dravidian Model's Failure

மாகறலில் திண்ணைப் பிரச்சாரத்தின்போது கும்பகோணம் சம்பவத்தைக் கண்டித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஆவேசம்!

காஞ்சிபுரம், அக். 8: கும்பகோணம் அருகே அரசுப் பள்ளியில் ரூ. 35 லட்சம் செலவில் புதிதாகக் கட்டப்பட்ட கழிப்பறையில் தடுப்புச் சுவர்கள் கூட இல்லாமல் கட்டப்பட்டிருக்கும் சம்பவத்தை சுட்டிக்காட்டி, இதுதான் திமுக அரசின் 'திராவிட மாடல்' ஆட்சியின் அவலங்கள் என்று அதிமுக முன்னாள் அமைச்சரும், மாவட்டச் செயலாளருமான வி.சோமசுந்தரம் ஆவேசமாகப் பேசினார்.

திண்ணைப் பிரச்சாரத்தில் கண்டனம்

அதிமுக காஞ்சிபுரம் கிழக்கு ஒன்றியம் சார்பில் காஞ்சிபுரம் அடுத்த மாகறல் மற்றும் களக்காட்டூர் ஆகிய பகுதிகளில் திண்ணைப் பிரச்சாரம் மற்றும் பூத் கமிட்டி நிர்வாகிகளுக்குத் தேர்தல் பயிற்சி குறித்த ஆலோசனைக் கூட்டமானது நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு வி.சோமசுந்தரம் உரையாற்றினார்.

அப்போது அவர், சமீபத்தில் சர்ச்சைக்குள்ளான கும்பகோணம் சம்பவத்தைப் பற்றிப் பேசியபோது கடுமையாகக் கொந்தளித்தார்:

கும்பகோணம் சம்பவம்: கும்பகோணம் அருகே அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ. 35 லட்சம் மதிப்பில் புதிதாகக் கட்டப்பட்ட கழிப்பறையில் ஒவ்வொரு கழிப்பறை பேஷனுக்கும் இடையே தடுப்புச் சுவர் கூட இல்லாமல் கட்டப்பட்டு, திறப்பு விழாவும் நடத்தப்பட்டுள்ளது.

திமுக ஆட்சி அவலம்: இதேபோல்தான் சென்னையில் சிமெண்ட் சாலை அமைக்கும்போது ஒரு இருசக்கர வாகனத்தை அகற்றாமல் கூட சிமெண்ட் சாலை அமைத்தனர். இவ்வாறுதான் தமிழகத்தில் 'திராவிட மாடல் ஆட்சி' என்று சொல்லிக்கொள்ளும் திமுக ஆட்சி நடந்து வருகிறது" என்று திமுக ஆட்சியின் அவலங்களைச் சுட்டிக் காட்டி அவர் பேசினார்.

இந்த நிகழ்வில் அதிமுக அமைப்புச் செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், அவைத் தலைவர் குண்ணவாக்கம் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட அம்மா பேரவைச் செயலாளர் கே.யு.எஸ்.சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

The Chennai Silks - Let the Celebrations Begin!

Silk Sarees- Buy Pure Silk and Soft Silk Sarees at The SCM Silk