திருவண்ணாமலையில் 8 புதிய பலி பீடங்களுக்கு அஷ்டபந்தன மருந்து சாத்தும் கும்பாபிஷேகம்: இன்று சிறப்பு யாகம் தொடங்கியது! Special Yagam Held at Thiruvannamalai Annamalaiyar Temple Ahead of Kumbabishekam for 8 New Bali Peedams

பஞ்சபூத ஸ்தல அண்ணாமலையார் கோவில் மாடவீதியில் நாளை கோலாகலம்: கோவில் அலுவலர்கள் பங்கேற்று வழிபாடு!

திருவண்ணாமலை, அக்டோபர் 30: பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் தலமாகவும் விளங்கும் திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் கோவிலின் நான்கு மாட வீதிகளிலும் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 8 பலி பீடங்களுக்கு அஷ்டபந்தன மருந்து சாத்தி மகா கும்பாபிஷேகம் நாளை (அக். 31) காலை கோலாகலமாக நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, இன்று (அக். 30) கோவிலில் சிறப்பு யாக பூஜைகள் தொடங்கின.

அண்ணாமலையார் கோவிலின் ஐந்தாம் பிரகாரத்தில் உள்ள பெரிய நந்தி பகவான் எதிரே அமைந்துள்ள கல்யாண சுந்தரேஸ்வரர் சன்னதி முன்பு யாகசாலை அமைக்கப்பட்டது.

யாகசாலையில் கணபதி ஹோமத்துடன் பூஜைகள் தொடங்கின. அதைத் தொடர்ந்து, அத்தி பலகைகளுக்குச் சிறப்பு பூஜைகள் சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க விமரிசையாக நடைபெற்றது. பின்னர், பூரணாகதி நடைபெற்று, யாகசாலை கலசங்களுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்தக் முதல்கால யாக பூஜையில் கோவில் அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் சிவனடியார்கள் எனப் பலரும் கலந்து கொண்டு அண்ணாமலையாரை வழிபட்டனர்.

இந்தச் சிறப்பு வழிபாடுகளைத் தொடர்ந்து, நாளை (அக். 31) காலை இரண்டாம் கால பூஜை நடைபெறுகிறது. அதன் பின்னர், காலை 9:30 மணியளவில் இந்திரலிங்கம், கற்பக விநாயகர் கோவில், ஈசானிய லிங்கம் உள்ளிட்ட இடங்களில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 8 பலி பீடங்களுக்கும் அஷ்டபந்தன மருந்து சாத்தி மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

The Chennai Silks - Let the Celebrations Begin!

Silk Sarees- Buy Pure Silk and Soft Silk Sarees at The SCM Silk