கரூர் துயரம்: பாதிக்கப்பட்டோரைச் சந்திக்கும் விஜய் - மாமல்லபுரத்தில் திங்கள்கிழமை சந்திப்பு! Vijay to Meet Karur Stampede Victims' Families in Mahabalipuram on Monday

கரூர் துயரம்: பாதிக்கப்பட்டோரைச் சந்திக்கும் விஜய் - மாமல்லபுரத்தில் திங்கள்கிழமை சந்திப்பு! Vijay to Meet Karur Stampede Victims' Families in Mahabalipuram on Monday

கரூரில் மண்டபங்கள் கிடைக்காததால் மாமல்லபுரத்துக்கு ஏற்பாடு: 41 குடும்பத்தினரைத் தனியறையில் சந்தித்து ஆறுதல்!

சென்னை, அக்டோபர் 25, 2025: கரூரில் தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் விஜய் நடத்திக் கொண்டிருந்த பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த துயரச் சம்பவம் தொடர்பாக, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் அளிக்கும் நிகழ்வு மாமல்லபுரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வரும் திங்கட்கிழமை (அக். 27). செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் (Mamallapuram). உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் அளிக்கத் தவெக தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், கரூரில் மண்டபங்கள் கோரப்பட்டும் கிடைக்கவில்லை எனத் தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்தச் சந்திப்பு செங்கல்பட்டில் உள்ள மாமல்லபுரத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நாளை (அக். 26, ஞாயிற்றுக்கிழமை) மாமல்லபுரத்திற்கு அழைத்து வந்து தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இதற்காக 50 அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வரும் திங்கட்கிழமை, ஒவ்வொரு குடும்பத்தினரையும் விஜய் தனியறையில் நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறுவார் எனத் தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

The Chennai Silks - Let the Celebrations Begin!

Silk Sarees- Buy Pure Silk and Soft Silk Sarees at The SCM Silk

advertisement Car Wale
© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks