ரஷ்யாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்த ரிலையன்ஸ் முடிவு? - அமெரிக்கத் தடைகளால் சிக்கல்! Reliance to Halt Russian Crude Oil Imports Due to US Sanctions on Rosneft and Lukoil

Rosneft, Lukoil உடனான ஒப்பந்தங்கள் நிறுத்தம்: மாற்று வழிகளை ஆராயும் முகேஷ் அம்பானி நிறுவனம்!

மும்பை, அக்டோபர் 24, 2025: உக்ரைன் மீதான தாக்குதலின் காரணமாக ரஷ்ய அரசுக்குச் சொந்தமான Rosneft மற்றும் Lukoil ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள தடைகளை (US Sanctions) முழுமையாகக் கடைப்பிடிக்கப்போவதாக இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (Reliance Industries Ltd) உறுதி அளித்துள்ளது. இதனால், ரிலையன்ஸ் நிறுவனம் ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலைத் தொடர்ந்து, ரஷ்ய எண்ணெய் நிறுவனங்களான Rosneft மற்றும் Lukoil மீது அமெரிக்கா நேற்று முன்தினம் (அக். 22) தடை விதித்தது.

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் நிறுவனம், குஜராத்தில் உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை நடத்தி வருகிறது. இந்நிறுவனம், ரஷ்யாவின் Rosneft நிறுவனத்துடன் நீண்டகால எண்ணெய் இறக்குமதிக்கான ஒப்பந்தம் செய்திருந்தது. அமெரிக்கத் தடைகளைக் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால், Rosneft நிறுவனத்துடனான எண்ணெய் வாங்குவதை ரிலையன்ஸ் நிறுத்தும் சூழல் உருவாகியுள்ளது.

ரிலையன்ஸ் செய்தித் தொடர்பாளர் பேட்டி:

இதுகுறித்து ஒரு தனியார் செய்தி நிறுவனத்துக்கு ரிலையன்ஸ் செய்தித் தொடர்பாளர் அளித்த பேட்டியில்,

ரஷ்ய எண்ணெய் இறக்குமதிக்கு மாற்று வழிகளை ஆராய்ந்து வருகிறோம். மேலும், இது தொடர்பாக இந்திய அரசின் வழிகாட்டுதல்களுடன் ரிலையன்ஸ் நிறுவனம் முழுமையாக ஒத்துப்போகும்," என்று தெரிவித்துள்ளார்.

ரிலையன்ஸ் நிறுவனம் ரஷ்யாவிலிருந்து நாளொன்றுக்குச் சுமார் 5 லட்சம் பீப்பாய்கள் அளவில் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான நீண்டகால ஒப்பந்தத்தைக் கொண்டிருந்தது.  பொதுவாக, இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களின் மொத்த கொள்முதலில் Rosneft மற்றும் Lukoil நிறுவனங்கள் சுமார் 60 சதவீதம் பங்கைக் கொண்டுள்ளன. இந்தத் தடைகள் இந்திய எண்ணெய் சுத்திகரிப்புத் துறைக்குப் பெரும் சவாலை அளிக்கும்.

இந்தத் தடைகளால் ஏற்படக்கூடிய பற்றாக்குறையைச் சமாளிக்க, ரிலையன்ஸ் நிறுவனம் சமீபகாலமாக மத்திய கிழக்கு மற்றும் பிரேசில் நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய் வாங்கத் தொடங்கியுள்ளது. மேலும், ரஷ்ய கச்சா எண்ணெய்க்கு இணையான தரமான எண்ணெய் மூலங்களைத் தேடும் பணியையும் தொடங்கியுள்ளது.

உக்ரைன் ஆக்கிரமிப்புக்குப் பிறகு, தள்ளுபடி விலையில் கிடைத்த ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்கும் மிகப்பெரிய நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவெடுத்திருந்தது. தற்போது, இந்தச் சமநிலை கேள்விக்குறியாகியுள்ளது. அமெரிக்கா, நவம்பர் 21ஆம் தேதிக்குள் இந்த நிறுவனங்களுடனான வர்த்தகத்தை முடித்துக்கொள்ளுமாறு காலக்கெடுவை நிர்ணயித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

The Chennai Silks - Let the Celebrations Begin!

Silk Sarees- Buy Pure Silk and Soft Silk Sarees at The SCM Silk