வடகிழக்குப் பருவமழை தொடக்கம்: கிடப்பில் உள்ள வடிகால்வாய்ப் பணிகளை முடிக்க கோரிக்கை! Chennai Nungambakkam Drainage Work Delayed

வடகிழக்குப் பருவமழை தொடக்கம்: கிடப்பில் உள்ள வடிகால்வாய்ப் பணிகளை முடிக்க கோரிக்கை! Chennai Nungambakkam Drainage Work Delayed

சென்னை நுங்கம்பாக்கத்தில் மழை நீர் வடிகால்வாய் பணி கிடப்பு: ஆபத்தான நிலையில் ராட்சத மரம்; இரும்புக் கம்பிகளால் விபத்து அபாயம்! 

புஷ்பா நகர் மக்கள் அவதி; லயோலா கல்லூரி அருகில் ராட்சத மரம் விழுந்ததில் கார் சேதம்!

சென்னை, அக்டோபர் 18, 2025: வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சென்னை நுங்கம்பாக்கம் புஷ்பா நகர் பகுதியில் நடைபெற்று வந்த மழை நீர் வடிகால்வாய் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் மழைக்காலத்தில் நீர் தேங்கி மக்கள் அவதிப்படுவது தொடர்கதையாகி உள்ளது.

முழுமையடையாத வடிகால் பணி

வடிகால்வாய்ப் பணியை மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பே ஆரம்பித்திருக்க வேண்டும், ஆனால் காலதாமதமாகத் தொடங்கியதால், பணி தற்போது முழுமையாக முடியவில்லை எனப் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

வடிகால்வாய்க்காகத் தோண்டப்பட்ட பள்ளத்தில், பெரிய ராட்சத மரம் ஒன்று ஆபத்தான நிலையில் சாய்ந்து நிற்கிறது. அந்த மரம் எப்போது வீடுகள் மீது விழுமோ என்ற அச்சத்தில் அப்பகுதி மக்கள் உள்ளனர். ஆனால் மாநகராட்சி ஊழியர்கள் அதனை அப்புறப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் புகார் எழுந்துள்ளது.

வடிகால்வாய்ப் பணிக்காகக் கொண்டு வரப்பட்ட இரும்புக் கம்பிகள் பொதுமக்களின் நடமாடும் சாலையிலேயே பாதுகாப்பற்ற முறையில் வீசப்பட்டுள்ளதால், நடந்து செல்பவர்களுக்கு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

காரில் விழுந்த மரம்

இதேபோல, தொடர் மழை காரணமாக நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரி அருகில் மற்றொரு ராட்சத மரம் ஒன்று சரிந்து சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மீது விழுந்தது. இதில் கார் முழுவதும் சேதமடைந்தது. இந்தச் சம்பவத்தால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. மாநகராட்சி ஊழியர்கள் அந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

மழைக்காலம் தீவிரமடைந்துள்ள நிலையில், நுங்கம்பாக்கம் புஷ்பா நகரில் கிடப்பில் உள்ள வடிகால்வாய்ப் பணியைத் துரிதப்படுத்தி, ஆபத்தான நிலையில் உள்ள மரத்தை அப்புறப்படுத்தவும், பாதுகாப்பற்ற கட்டுமானப் பொருட்களை அகற்றவும் மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks