வடகிழக்குப் பருவமழை 2025: மீட்புப் பணிகளுக்காக 6 தேசியப் பேரிடர் மீட்புப் படைக் குழுக்கள் தயார்! Northeast Monsoon 2025: 6 NDRF Teams Ready for Rescue Operations in Tamil Nadu

அரக்கோணத்தில் 5 குழுக்கள்; சென்னை மற்றும் திருநெல்வேலிக்குத் தனித் தனி குழுக்கள் தயார் நிலை; 24x7 அவசரக் கட்டுப்பாட்டு மையம் செயல்படுகிறது!

சென்னை, அக்டோபர் 18, 2025: தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், மழைவெள்ள மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபடுவதற்காகத் தேசியப் பேரிடர் மீட்புப் படை (NDRF) வீரர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

தேசியப் பேரிடர் மீட்புப் படை (NDRF) 04 படைப்பிரிவின் துணைக் கமாண்டன்ட் திரு. பிரவீன் பிரசாத் வெளியிட்டுள்ள தகவலின்படி, 

மீட்புப் படை விவரங்கள்:

மீட்புப் பணிகளுக்காக 30 வீரர்கள் கொண்ட மொத்தம் 6 குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. \

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் இருந்து 5 குழுக்கள் தயார் நிலையில் உள்ளன.

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரத்தில் தென் மாவட்டங்களுக்காக ஒரு குழு தயார் நிலையில் உள்ளது.

சென்னைக்காக அரக்கோணத்தில் இருந்து மேலும் ஒரு குழு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

தயார் நிலையில் உள்ள உபகரணங்கள்:

மீட்புப் பணிகளுக்காக இந்த வீரர்களுடன், ரப்பர் படகுகள், கயிறுகள், உயிர்காக்கும் கருவிகள், ஆழ்நிலை நீர்மூழ்கி வீரர்கள் மற்றும் மோப்ப நாய்கள் உள்ளிட்ட அனைத்து உபகரணங்களும் தயார் நிலையில் உள்ளன.

அவசரக் கட்டுப்பாட்டு மையம்:

மழை மற்றும் வெள்ள பாதிப்புகளை எதிர்கொள்ளும் வகையில், 24x7 அவசரக் கட்டுப்பாட்டு மையம் செயல்படுகிறது. இந்தக் கட்டுப்பாட்டு மையம், மாநில மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் உள்ள 24x7 அவசரக் கட்டுப்பாட்டு மையத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

மேலும், வெள்ள பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் விரைந்து செல்லத் தேவையான மீட்பு வாகனங்களுடன் வீரர்கள் தயார் நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

The Chennai Silks - Let the Celebrations Begin!

Silk Sarees- Buy Pure Silk and Soft Silk Sarees at The SCM Silk