பாகிஸ்தானுக்கான நதிநீரை நிறுத்த ஆப்கானிஸ்தான் முடிவு: குனார் ஆற்றின் குறுக்கே அணைகள் கட்டத் திட்டம்! Afghanistan Plans to Block River Flow to Pakistan by Building Dams on Kunar River

பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையிலான சமீபத்திய மோதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில் ஆப்கானிஸ்தான் அதிரடி முடிவு!

இந்தியாவுடன் ஏற்கனவே நதிநீர் விவகாரத்தில் மோதலைச் சந்தித்து வரும் பாகிஸ்தானுக்கு மேலும் ஒரு பின்னடைவாக, அதன் அண்டை நாடான ஆப்கானிஸ்தானும் பாகிஸ்தானுக்குச் செல்லும் நதிநீரைத் தடுப்பதற்கான நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. குனார் ஆற்றின் குறுக்கே அணைகள் கட்டப்பட்டு பாகிஸ்தானுக்கான நீர்வரத்தை நிறுத்த ஆப்கானிஸ்தான் திட்டமிட்டுள்ளது.

அண்மையில் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் நடந்த மோதல்களில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலுக்குப் பதிலடியாகவே ஆப்கானிஸ்தான் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

பாகிஸ்தானுக்குப் பாயும் முக்கிய நதிகளில் ஒன்றான குனார் ஆற்றின் (Kunar River) குறுக்கே அணைகளைக் கட்டுவதன் மூலம், பாகிஸ்தானுக்கு நீர் செல்வதைத் தடுக்க ஆப்கானிஸ்தான் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.  ஆப்கானிஸ்தானின் இந்த முடிவு, ஏற்கனவே கடுமையான நீர்ப் பற்றாக்குறையை எதிர்கொண்டு வரும் பாகிஸ்தானுக்குப் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

சிந்து நதிநீர் ஒப்பந்தத்தின்படி பாகிஸ்தானுக்குச் செல்லும் நீரைத் தடுக்க இந்தியா ஏற்கெனவே பல திட்டங்களைச் செயல்படுத்தி வரும் நிலையில், ஆப்கானிஸ்தானின் இந்த நடவடிக்கையும் சேர்ந்துகொள்வது பாகிஸ்தானுக்கு நெருக்கடியை அதிகப்படுத்தியுள்ளது.

குனார் ஆறு கிழக்கு ஆப்கானிஸ்தானில் இருந்து தொடங்கி, சிந்து நதியின் துணை ஆறுகளில் ஒன்றான காபூல் ஆற்றுடன் (Kabul River) இணைந்து இறுதியில் பாகிஸ்தானுக்குச் செல்கிறது. இந்த ஆற்றில் நீர் தடுக்கப்பட்டால், பாகிஸ்தானில் உள்ள விவசாயம் மற்றும் நீர் ஆதாரங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும்.

இந்த நதிநீர் விவகாரம், இரண்டு அண்டை நாடுகளுக்கு இடையே ஏற்கெனவே நிலவும் அரசியல் மற்றும் எல்லைப் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் என சர்வதேச அளவில் எதிர்பார்க்கப்படுகிறது.

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

The Chennai Silks - Let the Celebrations Begin!

Silk Sarees- Buy Pure Silk and Soft Silk Sarees at The SCM Silk