ஆப்பிரிக்கன் பன்றிக் காய்ச்சல் எதிரொலி: கேரளாவில் வைரஸ் பரவல் - கோவை எல்லையில் தீவிரக் கண்காணிப்பு! African Swine Fever Alert: Surveillance Intensified at Coimbatore-Kerala Border Checkposts

ஆப்பிரிக்கன் பன்றிக் காய்ச்சல் எதிரொலி: கேரளாவில் வைரஸ் பரவல் - கோவை எல்லையில் தீவிரக் கண்காணிப்பு! African Swine Fever Alert: Surveillance Intensified at Coimbatore-Kerala Border Checkposts

முதுமலை காட்டுப் பன்றிகளிலும் பாதிப்பு; வேலந்தாவளம், வாளையார் உள்ளிட்ட 12 சோதனைச் சாவடிகளில் குழுக்கள் அமைப்பு!

கோவை, அக்டோபர் 19, 2025: அண்டை மாநிலமான கேரளாவில் ஆப்பிரிக்கன் பன்றிக் காய்ச்சல் (African Swine Fever - ASF) கண்டறியப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, தமிழக எல்லையான கோவையில் வைரஸ் பரவுவதைத் தடுக்க மாவட்ட நிர்வாகமும் கால்நடைத் துறையும் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

வைரஸ் பரவல் நிலவரம்:

கேரளா: கேரளாவின் திருச்சூர் மற்றும் கோட்டயம் உள்ளிட்ட பகுதிகளில் வளர்ப்புப் பன்றிகளுக்கு ஆப்பிரிக்கன் பன்றிக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது.  மேலும், நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை வனப் பகுதியில் உள்ள காட்டுப் பன்றிகளுக்கும் இந்த வைரஸ் காய்ச்சல் கண்டறியப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோவையில் கண்காணிப்புத் தீவிரம்:

கோவையில் வைரஸ் பாதிப்பு பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் கால்நடைத் துறை சார்பில் கீழ்க்கண்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.  கோவை - கேரளா மாநில எல்லைகளான வேலந்தாவளம், வாளையார், முள்ளி உள்ளிட்ட 12 சோதனைச் சாவடிகளில் குழுக்கள் அமைக்கப்பட்டுத் தீவிர கண்காணிப்பு நடக்கிறது.  கேரளாவில் இருந்து பன்றி இறைச்சி மற்றும் பன்றித் தீவனம் ஏற்றி வரும் வாகனங்களைத் திருப்பி அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோவை வழியாகக் கேரளா பன்றிப் பண்ணைகளுக்குத் தீவனம் உள்ளிட்டவற்றை ஏற்றிச் சென்றுவிட்டுத் திரும்பி வரும் வாகனங்களுக்குச் சோதனைச் சாவடிகளில் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. கோவை மாவட்டத்தில் உள்ள தொண்டாமுத்தூர் உட்படச் சில இடங்களில் செயல்பட்டு வரும் பன்றி வளர்ப்புப் பண்ணைகளும் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

கால்நடைத் துறை அதிகாரிகள் தகவல்:

கால்நடைத் துறை அதிகாரிகள் இதுகுறித்துத் தெரிவிக்கும்போது, "கோவையில் தற்பொழுது வரை ஆப்பிரிக்கன் பன்றிக் காய்ச்சல் பாதிப்புகள் எதுவும் இல்லை. இருப்பினும், இது ஏ.எஸ்.எஃப் (ASF) வகை பன்றிக் காய்ச்சல் என்பதால், வளர்ப்புப் பன்றிகளில் ஏதாவது மாற்றங்கள் தெரிந்தால் உடனடியாகக் கால்நடைத் துறைக்குத் தகவல் அளிக்கும்படி பன்றிப் பண்ணை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று கூறினர்.


கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks