நெஞ்சைப் பிழியும் சோகம்: "இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்" - கரூர் உயிரிழப்பு குறித்து விஜய் வேதனைப் பதிவு!
"வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையில் உழல்கிறேன்" - உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்; காயமடைந்தோர் விரைவில் குணமடைய பிரார்த்தனை!
சென்னை, செப்டம்பர் 27: கரூர் வேலுச்சாமிபுரத்தில் இன்று (செப். 27) நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்களின் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 31 பேர் உயிரிழந்த கோரச் சம்பவம் குறித்து, தலைவர் விஜய் அவர்கள் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் மிகுந்த வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.
விஜய் அவர்களின் இந்தப் பதிவு, நெஞ்சைப் பிழியும் சோகத்தைக் குறிக்கும் வகையில் உள்ளது:
இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்; தாங்க முடியாத, வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையிலும் துயரத்திலும் உழன்று கொண்டிருக்கிறேன்.
— TVK Vijay (@TVKVijayHQ) September 27, 2025
கரூரில் உயிரிழந்த எனதருமை சகோதர சகோதரிகளின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். மருத்துவமனையில் சிகிச்சை…
தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்ட இந்தத் துயரச் சம்பவம், தலைவர் விஜய்யைப் பெரிதும் பாதித்துள்ளதையே இந்தப் பதிவு காட்டுகிறது. அவரது ரசிகர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் மத்தியில் இந்தச் சோக நிகழ்வு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.