Karur Stampede Tragedy: "விஜய்க்கு அனுபவம் இல்லை; அதனால்தான் இந்த விபத்து!" - சீமான் வேதனை! Vijay lacks experience; left for Chennai in panic - Seeman expresses grief

"முட்டுச்சந்தாகப் பார்த்துத்தான் எனக்கு இடம் ஒதுக்குவார்கள்"; கரூர் உயிரிழப்பு குறித்துப் பேசிய சீமான்: "பதற்றம் படபடப்பில் தான் விஜய் சென்னைக்குப் புறப்பட்டிருக்க வேண்டும்!"


சென்னை, செப்டம்பர் 28: கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்களின் பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 31 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்துப் பலரும் விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இது தொடர்பாக வேதனைப் பதிவை வெளியிட்டுள்ளார். இடத் தேர்வு குறித்து விஜய் அவர்களுக்குப் போதிய அனுபவம் இல்லை என்றும், அதன் விளைவாகவே இந்தப் பெரும் சோகம் நிகழ்ந்திருக்கலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சீமான் தனது பதிவில், "இடம் தொடர்பாகத் தம்பிக்கு (விஜய்) அனுபவம் இல்லை. ஆனால், எனக்கு 15 ஆண்டுகளாக எங்கெல்லாம் கூட்டம் கூட்ட முடியாதோ, முட்டுச்சந்தாகப் பார்த்துத்தான் இடம் ஒதுக்குவார்கள். அதனால் நான் பக்குவப்பட்டுப் பழகிவிட்டேன்" என்று தனது அரசியல் அனுபவத்தை சுட்டிக்காட்டினார். மேலும், நெரிசலில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்துப் பேசிய அவர், "இத்தனை உயிர்கள் போயுள்ளன என்றதும், அங்கு யாராக இருந்தாலும் ஒரு பதற்றமும் படபடப்பும் இருக்கும். அதில்தான் அவர் முடிவெடுத்துத் திடீரெனப் புறப்பட்டுவிட்டார் என நினைக்கிறேன்" என்று விஜய் உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சந்திக்காமல் சென்றதற்கான காரணமாக இருக்கலாம் என்று தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். இது போன்ற பெரும் துயரச் சம்பவங்கள் மூலம் கற்றுக்கொண்டு, மக்கள் கூடும் நிகழ்ச்சிகளில் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய கடமை அனைவருக்கும் உள்ளது என்றும் அவர் வலியுறுத்தினார்.

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

The Chennai Silks - Let the Celebrations Begin!

Silk Sarees- Buy Pure Silk and Soft Silk Sarees at The SCM Silk

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Website Developed & Maintained by
IPD Media Networks