கரூர் சோகம்: "ஸ்டாலின் போட்டோஷூட் வீடியோதான் சந்தேகம்!" - எடப்பாடி பழனிசாமி சரமாரி குற்றச்சாட்டு Karur Tragedy: "Stalin's Photoshoot Video Raises Suspicion" - EPS slams CM with sharp allegations

கரூர் சோகம்: "ஸ்டாலின் போட்டோஷூட் வீடியோதான் சந்தேகம்!" - எடப்பாடி பழனிசாமி சரமாரி குற்றச்சாட்டு Karur Tragedy: "Stalin's Photoshoot Video Raises Suspicion" - EPS slams CM with sharp allegations

"உங்கள் போட்டோஷூட் வீடியோதான் சந்தேகம்!" - கரூர் சோகம் குறித்து முதல்வர் ஸ்டாலின் மீது எடப்பாடி பழனிசாமி சரமாரி குற்றச்சாட்டு!

"பொம்மை முதல்வர்" என விமர்சனம்: ஆம்புலன்ஸ் அரசியல், மகனின் துபாய் பயணம், அமைச்சர் அழுவதுபோல் நடித்தது என அடுக்கிய எடப்பாடி பழனிசாமி; சிபிஐ விசாரணை தேவை என வலியுறுத்தல்!

சென்னை, செப்டம்பர் 29: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்களின் பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட விஷயம் பேசிய வீடியோ குறித்து, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கடுமையான விமர்சனத்தை முன்வைத்து அதிரடிக் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளார். "உங்கள் வீடியோதான் பல அரசியல் சந்தேகங்களை ஏற்படுத்துகிறது" என்றும், இந்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவர் அழுத்தமாக வலியுறுத்தியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி அவர்கள் தனது எக்ஸ் (X) பதிவில், "தமிழ்நாட்டுக்கு வாய்த்திருக்கும் முதல்வர், எப்படிப்பட்ட பொம்மை முதல்வர் என்பதற்கு இன்று அவர் வெளியிட்டுள்ள போட்டோஷூட் வீடியோவே சாட்சி" என்று சரமாரியாகத் தாக்கியுள்ளார். தான் நேற்று கரூர் சென்று உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி, அரசியலுக்கு இடமின்றி மக்களின் உணர்வுகளையும் சந்தேகங்களையும் பதிவு செய்ததாகக் குறிப்பிட்ட அவர், அதற்குப் பதில் அளிக்கத் திராணி இல்லாமல் சமூக வலைதளங்களில் அவதூறு பரவுகிறது என்று ஸ்டாலின் கூறுவது ஏன் என்று வினவினார். மேலும், அவர், 'தமிழ்நாடு மாணவர் சங்கம்' என்ற பெயரில் திமுக-காரர்கள் போஸ்டர் ஒட்டிய அவதூறா? அல்லது காவல்துறையின் குளறுபடிகள், திமுக-வின் வழக்கமான ஆம்புலன்ஸ் அரசியல், தடியடி காட்சிகள் வெளிவந்தது வதந்தியா? என்றும் கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து ஆளும் கட்சியைச் சாடிய அவர், "பொறுப்போடு நடந்துகொள்வது என்றால் என்ன? உங்கள் அமைச்சர் ஒருவர் அழுவதுபோல் நடிக்கத் தெரியாமல் மாட்டிக் கொண்டாரே - அதுவா? அல்லது, உங்கள் மகனும், துணை முதல்வருமானவர், கரூர் வந்து சம்பிரதாயத்திற்கு போட்டோஷூட் எடுத்த கையோடு, துபாய்க்கு ஒக்கேஷன் பறந்து சென்றுவிட்டாரே - அதுவா?" என்று அதிரடிக் குற்றச்சாட்டுகளைத் தொடுத்து, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களுக்குக் கனக்காத இதயம் இப்போது மட்டும் கலங்குவது ஏன் என்றும் விமர்சனத்தின் வீரியத்தை கூட்டினார். சென்னை ஏர் ஷோ-வில் ஐந்து பேர் உயிரிழந்தபோதும், ஸ்டாலினால் வீட்டில் இருக்க முடிந்ததைக் குறிப்பிட்ட அவர், "யாரை ஏமாற்றப் பார்க்கிறீர்கள் ஸ்டாலின் அவர்களே?" என்று திரைசேர்க்கை செய்துள்ளார். 

எதிர்க்கட்சிகள் யாரும் அரசியல் செய்யாத நிலையில், ஸ்டாலின் வெளியிட்ட இந்த வீடியோதான் பல அரசியல் சந்தேகங்களை ஏற்படுத்துகிறது என்று அவர் ஆணித்தரமாகக் கூறியுள்ளார். மேலும், நீதியரசர் அருணா ஜெகதீசன் ஆணையத்தின் விசாரணை காட்சிகள் ஊடகங்களில் தொடர்ந்து வருவதால், இது அரசின் தவறுகளை மூடி மறைக்கும் கண் துடைப்பு ஆணையம் என்பதை மக்களுக்குக் காட்டுவதாகச் சாடியுள்ளார். எனவே, மக்களுக்கு உண்மை நிலை தெரிய வர, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும், இந்தத் துயர நேரத்தில் போட்டோஷூட்டால் மக்களை மேலும் துன்புறுத்த வேண்டாம் என்றும் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அழுத்தமான வலியுறுத்தலை விடுத்துள்ளார்.

முன்னதாக, கரூர் சம்பவம் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட வீடியோவில், சோகமும் துயரமும் சூழ்ந்துள்ள சூழலில் பொறுப்பற்ற முறையில் விஷமத்தனமான செய்திகளைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டதுடன், உயிரிழந்தோர் எந்தக் கட்சியைச் சார்ந்தோராக இருந்தாலும் அவர்கள் நம் தமிழ் உறவுகள் என்றும், விசாரணை ஆணைய அறிக்கை கிடைத்த பின்னர் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் ஆலோசனை நடத்தி புதிய விதிமுறைகள் வகுக்கப்படும் என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks