கோவையில் சிறுவர்களை பெல்டால் தாக்கிய காப்பாளர் செல்வராஜ் கைது! Belt beating at Coimbatore children's home: Caretaker arrested

குழந்தைகள் பாதுகாப்பு இல்லத்தில் கொடூரம்; சமூக ஆர்வலர்கள் கோரிக்கையை அடுத்து அதிரடி நடவடிக்கை!

கோவை, செப்டம்பர் 25: கோவை மாவட்டம், அன்னூர் அருகே உள்ள கோட்டப்பாளையம் கிராமத்தில் செயல்பட்டுவரும் தனியார் குழந்தைகள் பாதுகாப்பு இல்லத்தில், சிறுவர்களை பெல்டால் தாக்கிய விவகாரம் தொடர்பாக, அந்தக் காப்பகத்தின் பொறுப்பாளர் செல்வராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.

"கிரேஸ் ஹாப்பி ஹோம் டிரஸ்ட்" என்ற பெயரில் இயங்கி வந்த அந்தக் காப்பகத்தில், சிறுவர்களை காப்பாளர் ஒருவர் பெல்டால் கடுமையாகத் தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, குழந்தைகள் நல ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் அந்தக் காப்பகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார், சிறுவர்களைத் தாக்கியதாகக் கூறப்படும் காப்பகப் பொறுப்பாளர் செல்வராஜ் என்பவரைக் கைது செய்தனர். இந்தச் சம்பவம், குழந்தைகள் பாதுகாப்பு இல்லங்களின் தரம் மற்றும் பாதுகாப்புக் குறித்து மீண்டும் ஒருமுறை கேள்விகளை எழுப்பியுள்ளது.


Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

Durex Condoms

"நீங்கள் நம்பும் பாதுகாப்பு" - இப்போதே வாங்குங்கள்!