தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்ற மண் நாமக்கல் - திமுக, பாஜக, அதிமுகவை சரமாரியாக விமர்சித்த விஜய்! TVK leader Vijay Kidney Scam in Karur and Namakkal and Slams DMK's Unfulfilled Promises

தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்ற மண் நாமக்கல் - திமுக, பாஜக, அதிமுகவை சரமாரியாக விமர்சித்த விஜய்! TVK leader Vijay Kidney Scam in Karur and Namakkal and Slams DMK's Unfulfilled Promises
வாக்குறுதிகளை நிறைவேற்றாதது வடிவேலுவின் ஒன்றுமில்லாத பாக்கெட் போல; செந்தில் பாலாஜி மீது மறைமுகத் தாக்குதல்!


தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், இன்று (செப். 27, 2025) நாமக்கல்லில் தனது மக்கள் சந்திப்பு பரப்புரையை மேற்கொண்டார். அப்போது, நாமக்கல்லின் பெருமைகளைக் குறிப்பிட்டுப் பேசியதோடு, திமுக அரசின் வாக்குறுதிகள், பாஜகவின் நிலைப்பாடு மற்றும் அதிமுகவின் கூட்டணி ஆகியவற்றை அவர் கடுமையாக விமர்சித்தார்.

நாமக்கல்லின் பெருமை:

தனது உரையைத் தொடங்கிய விஜய், நாமக்கல் மாவட்டத்தை 'முட்டை உலகம்' (Egg City) என்று குறிப்பிட்டதுடன், தமிழ்நாட்டு மக்களுக்கு உணர்ச்சிகளை ஊட்டுகின்ற மண்ணும் கூட நாமக்கல் மாவட்டம் என்று புகழ்ந்தார்.

தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்ற வரிகளை எழுதிய நாமக்கல் கவிஞர் திரு. ராமலிங்கம் பிள்ளையை இந்த மண் தந்துள்ளது என்று பெருமிதம் கொண்டார். மேலும், சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக இருந்து, இட ஒதுக்கீடு உரிமையை (கம்யூனல் ஜிஓ 1071) வழங்கிய சுப்பராயன் அவர்களைத் தந்ததும் திருச்செங்கோடு பகுதிதான் என்றும் அவர் நினைவூட்டினார்.

நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள்:

நாமக்கல் கவிஞருக்கு மணிமண்டபம் கட்டுவோம் என்று திமுக கொடுத்த வாக்குறுதி எண் 456 நிறைவேற்றப்படவில்லை என்று விமர்சித்த விஜய், இது ஒரு படத்தில் வடிவேலு ஒன்றுமில்லாத பாக்கெட்டைக் காட்டுவது போலத்தான். ஒவ்வொரு வாக்குறுதியையும் படித்துவிட்டு, அந்த ஒன்றுமில்லாத பாக்கெட்டை நமக்குக் காட்ட வேண்டியதுதான் இவர்களின் வேலை என்று கிண்டலடித்தார்.

திமுகவின் முக்கிய வாக்குறுதிகள் (நிறைவேற்றப்படாதவை):

ஒவ்வொரு ஒன்றியத்திலும் தானிய சேமிப்புக் கிடங்குகள் அமைப்பது (வாக்குறுதி எண் - 50).

* கொப்பரைத் தேங்காயை அரசே கொள்முதல் செய்து, தேங்காய் எண்ணெய்யை நியாய விலைக் கடைகளில் விற்பனை செய்வது (வாக்குறுதி எண் - 66).

* நியாய விலைக் கடைகளில் நாட்டுச் சர்க்கரை, வெல்லம் விநியோகம் செய்வது (வாக்குறுதி எண் - 68).

* அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், போக்குவரத்து ஊழியர்களுக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்துவது (வாக்குறுதி எண் - 152).

கிட்னி திருட்டு மற்றும் செந்தில் பாலாஜி விமர்சனம்:

நாமக்கல் முட்டைச் சேமிப்புக் கிடங்கு, பயோலாஜிக்கல் ஆராய்ச்சி மையம் போன்ற கோரிக்கைகள் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளதாகக் கூறிய விஜய், நாமக்கல் மக்களை அதிகம் பாதித்த கிட்னி திருட்டு வழக்கை சுட்டிக் காட்டினார்.

திமுக சட்டமன்ற உறுப்பினருக்குச் சொந்தமான மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற கிட்னி திருட்டு, நாடறிந்த விஷயம். விசைத்தறியில் பணிபுரியும் ஏழைப் பெண்களைக் குறிவைத்து இந்தத் திருட்டு நடந்திருக்கிறது என்று கூறுகிறார்கள். இந்த விஷயத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும், நம்முடைய ஆட்சி அமைந்ததும் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று எச்சரித்தார்.

மேலும், விசைத்தறித் தொழிலாளர்கள் கந்துவட்டிக் கொடுமையால் கிட்னியை விற்கும் அளவிற்குத் தள்ளப்பட்டு இருக்கிறார்கள் என்றால், அதற்கு அவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தாத 'மாடல் அரசுதான்' காரணம் என்றும் குற்றம் சாட்டினார்.

புதுசா என்னத்த சொல்லச் சொல்றீங்க?

அடிப்படை வசதிகள் (நல்ல குடிநீர், சாலை, மருத்துவம், பெண்கள் பாதுகாப்பு) குறித்து மட்டுமே மக்கள் தன்னிடம் கேட்பதாகக் கூறிய விஜய், அரசியல் தலைவர்களின் விமர்சனங்களுக்குப் பதிலளித்தார்.

புதுசா சொல்லுங்க, புதுசா சொல்லுங்கன்னா என்னத்த சொல்ல சொல்றீங்க எனக்குப் புரியலையே. செவ்வாய் கிரகத்தில் ஐடி கம்பெனி கட்டப்படும், காற்றில் கல் வீடு கட்டப்படும், அமெரிக்காவிற்கு ஒத்தையடி பாதை போடப்படும் என்று அடித்து விடுவோமா? நம்முடைய முதலமைச்சர் அடித்து விடுவாரே, அதுபோல அடித்து விடுவோமா?" என்று திமுகவின் கவர்ச்சியான வாக்குறுதிகளைக் கிண்டலடித்தார்.

பாஜகவுடனான உறவு குறித்த விமர்சனம்:

அரசியல் நிலைப்பாடு குறித்துப் பேசிய விஜய், திமுக, பாஜக மற்றும் அதிமுக ஆகிய மூன்று கட்சிகளையும் கடுமையாகச் சாடினார்.

1. இந்த பாசிச பாஜக அரசுடன் நாங்கள் எப்பொழுதும் ஒத்துப்போக மாட்டோம்.

2. இந்த திமுக அரசு மாதிரி அண்டர் கிரவுண்ட் டீலிங் (மறைமுக உறவுக்காரர்களாக) இந்த பாஜகவோட எப்பொழுதும் இருக்க மாட்டோம்.

3. ஜெயலலிதா அவர்கள் சொன்ன விஷயத்தை மறந்துவிட்டு, ஒரு பொருந்தாக் கூட்டணியை அமைத்துக் கொண்ட அதிமுக மாதிரி நாம் இருக்க மாட்டோம்.

அடுத்த வருடம் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் திமுகவிற்கு வாக்களித்தால், அது பாஜகவிற்கு வாக்களித்தது போல் தான் என்று மக்களை எச்சரித்தார்.

2026-ல் போட்டி:

இறுதியாக, 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டி தவெக மற்றும் திமுக இடையேதான் இருக்கும் என்று கூறிய விஜய், ஒன்று மாபெரும் மக்கள் சக்தி கொண்ட ஏழையோரின் குரலாய் இருக்கின்ற தமிழக வெற்றிக் கழகம்; மற்றொன்று கொள்கை என்ற பெயரில் மக்களை ஏமாற்றிவிட்டுக் கொள்ளையடித்துத் தமிழ்நாட்டை ஏமாத்துற இந்த திமுக. இந்த இரண்டே இரண்டு பேருக்குத்தான் போட்டி என்று முழக்கமிட்டார்.

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks