India vs Pakistan Asia Cup Final: பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா சாம்பியன்! 9-வது முறையாக ஆசியக் கோப்பையை முத்தமிட்டு சாதனை! India are Champions! Defeat Pakistan to Lift Asia Cup for 9th Time, Creating History!

திலக் வர்மாவின் அபார ஆட்டம்; குல்தீப் யாதவின் சுழல் ஜாலம்; நடப்புத் தொடரில் பாகிஸ்தானை 3 முறை வீழ்த்தி கம்பீரம்!

துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வந்த 17-வது ஆசியக் கோப்பை (டி20) கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதி ஆட்டத்தில், பரம எதிரிகளான இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் கடைசி ஓவர் வரை பரபரப்பாக நீடித்த ஆட்டத்தில், பாகிஸ்தானை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி 9-வது முறையாகச் சாம்பியன் பட்டத்தை வென்று வரலாற்றுச் சாதனை படைத்தது.

இந்தியாவின் அனல் பறக்கும் ஆட்டம்:

நடப்புத் தொடரில் இதுவரை தோல்வியைச் சந்திக்காத இந்திய அணி, இறுதிப் போட்டியிலும் தனது வீறுநடையைத் தொடர்ந்தது. இதில் 'டாஸ்' வென்ற இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தார்.

பாகிஸ்தான் - இந்தியா 

முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணிக்குச் சகிப்சதா பர்ஹான், பஹர் ஜமான் கூட்டணி சிறப்பான தொடக்கத்தை அளித்தது. ஒரு கட்டத்தில் பாகிஸ்தான் 180 ரன்களைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த இணை உடைந்ததும் ஆட்டத்தின் போக்கே மாறியது.

* சகிப்சதா 45 ரன்னில் வெளியேற, அதன் பின்னர் வந்த எந்த வீரரும் நிலைத்து நிற்கவில்லை.

* பஹர் ஜமான் 46 ரன்னில் ஆட்டமிழந்த நிலையில், விக்கெட் கீப்பர் முகமது ஹாரிஸ், ஷகீன் ஷா அப்ரிடி ஆகியோர் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர்.

* பாகிஸ்தான் அணி 19.1 ஓவர்களில் 146 ரன்களில் ஆல்-அவுட் ஆனது.

* இந்தியத் தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் அபாரமாகப் பந்து வீசி 4 விக்கெட்டுகளைச் சாய்த்தார். ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்ரவர்த்தி, அக்‌ஷர் பட்டேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

திலக் வர்மா அபாரம்:

தொடர்ந்து 147 ரன் இலக்கை நோக்கி களம் இறங்கிய இந்தியாவுக்குத் தொடக்கமே அதிர்ச்சியளித்தது. அபிஷேக் ஷர்மா (5 ரன்), கேப்டன் சூர்யகுமார் யாதவ் (1 ரன்), சுப்மன் கில் (12 ரன்) என மூவரும் அடுத்தடுத்து வெளியேறியதால், இந்திய அணி 20 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து நெருக்கடிக்குள்ளானது.

அப்போது களமிறங்கிய திலக் வர்மா (69*) மற்றும் சஞ்சு சாம்சன் (24 ரன்) ஜோடி அணியைச் சரிவில் இருந்து மீட்டது. விக்கெட் வீழ்ந்தாலும் திலக் வர்மா நிலைத்து நின்று அபாரமாக ரன் சேர்த்தார்.

இந்தியா திரில் வெற்றி:

கடைசி ஓவரில் இந்தியாவின் வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ரவுஃப் பந்து வீசினார்.

* முதல் பந்தில் 2 ரன் எடுத்த திலக் வர்மா, அடுத்த பந்தை சிக்சருக்குப் பறக்கவிட்டார்.

* 3-வது பந்தில் ஒரு ரன் எடுக்க, 4-வது பந்தை எதிர்கொண்ட ரிங்கு சிங், பவுண்டரிக்கு விரட்டி தித்திப்பாக ஆட்டத்தை முடித்து வைத்தார்.

இந்திய அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 150 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையைத் தக்க வைத்தது. திலக் வர்மாவின் ஆட்டம் அவருக்கு ஆட்ட நாயகன் விருதையும் பெற்றுத் தந்தது.

சாதனைப் பயணம்:

நடப்புத் தொடரில் தோல்வியே சந்திக்காத இந்தியா, 7 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று கம்பீரமாக கோப்பையை முத்தமிட்டது. மேலும், நடப்புத் தொடரில் பாகிஸ்தானை மட்டும் 3 முறை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆசியக் கோப்பையை இந்திய அணி வெல்வது இது 9-வது முறையாகும்.

உறுதிமொழிக்கு முக்கியத்துவம்:

சமூக வலைத்தளங்களில் வெளியான தகவலின்படி, பாகிஸ்தான் அமைச்சர் கைகளால் கோப்பையை வாங்க மறுத்த இந்திய வீரர்கள், கோப்பையை பெறாமலேயே வெற்றியை மைதானத்தில் கொண்டாடியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.


Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

Durex Condoms

"நீங்கள் நம்பும் பாதுகாப்பு" - இப்போதே வாங்குங்கள்!