தவெக தலைவர் விஜய் சுற்றுப்பயண திட்ட மாற்றம்: கரூர் விபத்துக்கான பின்னணி! Karur Tragedy: Accident Occurred Because December Rally Was Hastily Rescheduled!

டிசம்பரில் நடக்க வேண்டிய கரூர் கூட்டம் அவசரமாக மாற்றப்பட்டதால் தான் விபத்து? - வெளியான புதிய தகவல்

திட்டமிட்டபடி சென்றிருந்தால் விபத்து நிகழ்ந்திருக்காது; சென்னை, திருவள்ளூர் கூட்டத்தை ரத்து செய்து நாமக்கல், கரூருக்கு நாள் குறிக்கப்பட்டதால் கோரம்!

சென்னை, செப்டம்பர் 29: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்களின் பரப்புரைக் கூட்டத்தில் 40 உயிர்களைப் பலி கொண்ட கரூர் விபத்தானது, திட்டமிடப்பட்டபடி டிசம்பர் மாதம் நடக்க வேண்டிய கூட்டம் என்றும், கடைசி நேரத்தில் அவசரமாக மாற்றப்பட்டதன் விளைவாகவே இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது என்றும் வெளியாகி உள்ள தகவல் அரசியல் களத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காவல்துறை தலைமை இயக்குநரிடம் (டிஜிபி) த.வெ.க. பொதுச் செயலாளர் என். ஆனந்த் அவர்கள் செப்டம்பர் 9ஆம் தேதி அனுமதி கோரிய அசல் சுற்றுப்பயணத் திட்டத்தின்படி, விஜய் அவர்கள் செப்டம்பர் 27ஆம் தேதி வடசென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பரப்புரை செய்ய இருந்திருக்கிறார். ஆனால், இந்தத் திட்டம் சமீபத்தில் திடீரென மாற்றப்பட்டு, டிசம்பர் 13ஆம் தேதி திட்டமிடப்பட்டிருந்த நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களுக்கான பயணம் செப்டம்பர் 27ஆம் தேதிக்கு முன்னுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆளும் திமுக கரூர் மாவட்டத்தில் செப்டம்பர் 17ஆம் தேதி முப்பெரும் விழாவை நடத்தியிருந்த நிலையில், இந்த மாற்றங்கள் அரங்கேறியுள்ளன.  

அசல் திட்டத்தின்படி, விஜய் அவர்கள் செப்டம்பர் 13ஆம் தேதி திருச்சியில் பிரச்சாரத்தைத் தொடங்கினார். அங்கு கட்டுக்கடங்காத கூட்டம் காரணமாக, திருச்சி விமான நிலையத்திலிருந்து விழா மேடைக்குச் செல்ல பல மணி நேரம் ஆனது. அதன் பிறகு, பெரம்பலூர் மற்றும் அரியலூரில் மணி நேரக் கணக்கில் தாமதமாக வந்ததால், அரியலூரில் தனது உரையை அவர் முழுவதுமாக ரத்து செய்யும் நிலை ஏற்பட்டது. இந்தக் கடுமையான அனுபவங்களைக் கருத்தில் கொண்டு, செப்டம்பர் 20ஆம் தேதி நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மூன்று மாவட்டப் பரப்புரைத் திட்டத்தில் இருந்து மயிலாடுதுறையை சரசரவெனக் கைவிட்டனர்.

சமீபத்தில், கட்சியின் அசல் அட்டவணை அடுத்த ஆண்டு பிப்ரவரி 21ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு, திருத்தப்பட்டது. இந்த திருத்தப்பட்ட திட்டத்தின்படிதான், கரூர் கூட்டம் முன்னுக்கு இழுக்கப்பட்டது. சென்னை மற்றும் திருவள்ளூரில் நடக்க இருந்த கூட்டங்கள் அடுத்த ஆண்டு பிப்ரவரிக்குத் தள்ளி வைக்கப்பட்டன. 

கரூரில் நடந்த இந்த கோர விபத்தைத் தொடர்ந்து, அக்டோபர் 5ஆம் தேதி வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் நடக்கவிருந்த பரப்புரைக் கூட்டம் தற்காலிகமாகக் கைவிடப்படலாம் என்று தகவல்கள் வந்தாலும், இது குறித்துத் த.வெ.க. தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.


Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

Durex Condoms

"நீங்கள் நம்பும் பாதுகாப்பு" - இப்போதே வாங்குங்கள்!