களறி கற்க வந்த 14 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை..!

14 வயது சிறுவனை மானபங்கம் செய்த குரு கைது செய்யப்பட்டார். திருவனந்தபுரம் நெய்யாற்றின்கரையைச் சேர்ந்த புஷ்பராஜ் என்கிற புஷ்பாகரன் (62) கைது செய்யப்பட்டார்.

இவர், சேர்த்தலை பேரூராட்சி 24வது வார்டுக்கு உள்பட்ட செயின்ட் மார்ட்டின் பகுதியில் உள்ள வாடகை வீட்டில் தங்கி, களறி கற்பித்து வந்தார்.

அங்கு களறி கற்க வந்த 14 வயது சிறுவனுக்கு புஷ்பாகரன் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுவன் திடீரென களறி பயிற்சிக்கு செல்ல மறுத்துள்ளான்.

இதனை அடுத்து குடும்பத்தினர் நடத்திய விசாரணையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. சிறுவன் வாக்குமூலத்தின் அடிப்படையில் புஷ்பாகரன் மீது போலீசார் பாலபோக்சோ வழக்குப் பதிவு செய்தனர்.

                                                                                                                                    -Maharaja B

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

Travel with us!

News Editor's/Reporter's can join with our Desk Team. Publish your news now on 24×7. Reachout with your contact through editor@ipdtamil.com