பி.டெக்., மாணவர் கத்தியால் குத்திக்கொலை - 5 பேர் கைது...!

உத்தரப்பிரதேசத்தின் மீரட்டில் உள்ள எம்ஐஇடி கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பிடெக் மாணவர் ஒருவர் கல்லூரி வளாகத்திற்குள் கொடூரமாக குத்திக் கொல்லப்பட்டார்.

நிகில் சௌத்ரி என்ற 20 வயது இளைஞன் அபிஷேக் என்ற முதலாம் ஆண்டு மாணவனுடன் தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது, அதைத் தொடர்ந்து அவர் நிகிலை கத்தியால் குத்தியுள்ளார்.

கத்தியால் கொடூரமாக குத்தப்பட்ட நிகில், உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து 5 மாணவர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.

மீரட் எஸ்பி (ஊரகம்) கேசவ் குமார் கூறுகையில், சில மாணவர்கள் தனிப்பட்ட தகராறு காரணமாக நிகிலை கத்தியால் குத்திக் கொன்றனர். ஐந்து மாணவர்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அதில் முக்கிய குற்றவாளியை கைது செய்து விசாரித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

The Chennai Silks - Let the Celebrations Begin!

Silk Sarees- Buy Pure Silk and Soft Silk Sarees at The SCM Silk