மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாவட்ட தலைவர், செயலாளர், பொருளாளர், ஓருங்கினைப்பாளர் நியமனம் - தலைவர் காயல் அப்பாஸ் அறிவிப்பு..!

கரூர்:

மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாவட்ட தலைவர் – பால கிருஷ்னண்,செயலாளர் – அசோக்குமார், பொருளாளர் – பரமசிவம், ஓருங்கினைப்பாளர் – பாரத் ஆகியோரை நியமனம் செய்து மாநில தலைவர் காயல் அப்பாஸ் அறிவித்துள்ளார். இது குறித்து காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள நியமன அறிக்கையில் கூறிருப்பதாவது.

மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் விதி முறைகளின் படியும் எனக்குள் அதிகாரத்தின் கீழ் மாநில பொருளாளர் ராஜ்குமார் அவர்களின் பரிந்துரையின் படி கரூர் மாவட்டம் , முகைதீன் நகரை சேர்ந்த பால கிருஷ்னண் மாவட்ட தலைவராகவும் , தங்கராஜ் நகர் , அரசு காலணியை சேர்ந்த அசோக்குமார் மாவட்ட செயலாளராகவும் , பசுபதி பாளையம் , அருணாச்சல நகர் , 4வது தெருவை சேர்ந்த பரமசிவம் மாவட்ட பொருளாளராகவும், வாங்கல், முனியப்பனூர், ரங்கராஜ் நகரை சேர்ந்த பாரத் மாவட்ட ஓருங்கினைப்பாளராகவும் இன்று 18-04-2022 முதல் நியமிக்கபட்டுள்ளார்கள் . மேலும் கரூர் மாவட்ட தலைவர் பொறுப்பு வகித்து வந்த மாரியப்பன் இப்பொறுப்பிலிருந்து விடுவிக்க படுகிறார் . மேலும் கட்சியின் உறுப்பினராக தொடருவார் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.

மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் விதி முறைகளுக்கு கட்டு பட்டு கட்சியின் வளர்ச்சிக்காக அயராமல் பாடுபட வேண்டும் தாங்கள் பதவியின் தன்மையை உணர்ந்து இறையாண்மைக்கு உட்பட்டு அனைத்து சமூக மக்கள் நலனுக்காக பாடு பட வேண்டும் என கேட்டு கொள்கிறேன் .

மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் கரூர் மாவட்ட பொறுப்பாளராக நியமிக்க பட்டுள்ள பால கிருஷ்னண் , அசோக் குமார், பரமசிவம், பாரத், ஆகியோருக்கு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் முழு ஓத்துழைப்பு நல்மாறு கேட்டு கொள்கிறேன். மேலும் தாங்களின் சமூக பணி சிறக்க எனது மன மார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் . இவ்வாறு காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

Travel with us!

News Editor's/Reporter's can join with our Desk Team. Publish your news now on 24×7. Reachout with your contact through editor@ipdtamil.com