உங்க அன்பு, பாசத்தைவிட உலகில் எனக்கு எதுவுமே பெரிது இல்லை என்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் உருக்கமாகப் பேசியுள்ளார்.
திருச்சியில் தனது முதல் மக்கள் சந்திப்புப் பரப்புரையைத் தொடங்கிய விஜய், தற்போது அரியலூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அப்போது, தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பேசிய அவர், தனது ரசிகர்களின் அன்பு குறித்து உணர்ச்சிபூர்வமாகத் தெரிவித்தார்.
உங்களோட இந்த அன்புக்காக, எவ்வளவு பெரிய உயரத்தையும், வசதியையும், வருமானத்தையும் தூக்கி எறிந்து வரலாம். உங்கள் அன்பு, பாசத்தைவிட உலகில் எனக்கு எதுவுமே பெரிது இல்லை என்று அவர் கூறினார்.
மேலும், உங்கள் வீட்டில் ஒருவனாக, உறவினராக என்னை ஆக்கியுள்ளீர்கள். உங்கள் அன்புதான் என் பலம் என்றும் அவர் தெரிவித்தார்.
.jpg)