கோவை:
கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் பீளமேடு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு திடீர் ஆய்வு மேற்கொண்ட மாண்புமிகு மேயர் திருமதி. கல்பனா ஆனந்தகுமார் அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் திரு. மு. பிரதாப் இ. ஆ. ப. , ஆகியோர் மருந்து மாத்திரைகள் இருப்பு மற்றும் வருகைப் பதிவேடுகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தபோது எடுத்த படம்.
உடன் மதிப்பிற்குரிய துணை மேயர் திரு. ரா. வெற்றிசெல்வன் அவர்கள், உதவி ஆணையர்கள் திரு. சங்கர், திருமதி. மோகனசுந்தரி, உதவி செயற்பொறியாளர் திரு. செந்தில்பாஸ்கர், நகர்நல அலுவலர் மரு. சதீஷ்குமார், மண்டல சுகாதார ஆய்வாளர் திரு. இராதாகிருஷ்ணன், மருத்துவர்கள், சுகாதார ஆய்வாளர்கள் ஆகியோர் உள்ளனர்.