அதிமுக அலுவலகத்தில் தொடர்ந்து பதற்றம்.! கற்களை வீசி தாக்குதல்.!!

சென்னை:

ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஈபிஎஸ் ஆதரவாளர்களை தாக்கியதால் எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று அதிமுக பொதுக்குழு நடைபெற உள்ள நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.  இரு தரப்பு ஆதரவாளர்களும் ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.  இதனால் அதிமுக தலைமை அலுவலகத்தில் கடும் பதற்றம் நிலவி வருகிறது.  அதிமுக அலுவலகத்திற்கு பூட்டு போட பட்ட நிலையில் அது தற்போது உடைக்கப்பட்டு உள்ளது.

ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கும் இபிஎஸ் ஆதார்வாலருக்கும் கைகலப்பு ஏற்பட்டதால் போலீசார் அதிகமாக உள்ளனர். அதிமுக தலைமையக பூட்டை உடைத்து ஒ பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்கள் உள்ளே நுழைந்துள்ளனர்.  அதிமுக தலைமை அலுவலகத்தில் இருக்கும் பேனரில் இருக்கும் எடப்பாடி பழனிச்சாமியின் புகைப்படத்தை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கிழித்தெறிந்தனர்.

                                                                                                                                    – RK Spark

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

The Chennai Silks - Let the Celebrations Begin!

Silk Sarees- Buy Pure Silk and Soft Silk Sarees at The SCM Silk