பள்ளிக்கு வராத 4ஆம் வகுப்பு சிறுமி; ஆசிரியரின் பாலியல் அத்துமீறல்..!

கர்நாடக:

நான்காம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர் சந்திரசேகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதையடுத்து கல்வித்துறை அவரை சஸ்பெண்ட் செய்தது.

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் உள்ள கே.ஆர். பெட் தாலுகாவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

மார்ச் 31ஆம் தேதி பள்ளிக் கழிவறையில் மாணவியை சந்திரசேகர் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. பள்ளி திறக்கப்பட்ட பின்னரும் மாணவி வகுப்புக்கு செல்ல தயாராக இல்லை. இதையடுத்து பெற்றோர் சக மாணவர்களிடம் தகவல் கேட்டனர்.

சந்திரசேகர் கழிவறையில் தங்கள் துணிகளை களைய வைப்பதும், தங்களை தகாத முறையில் தொடுவதையும் வாடிக்கையாக கொண்டிருந்துள்ளதாகவும், இந்த விஷயத்தை வெளியில் சொல்லக் கூடாது என்று மிரட்டியதாக பாதிக்கப்பட்ட மாணவிகள் கூறினார். இது பற்றி பெற்றோர் போலீசில் புகார் செய்தனர்.

கல்வி அலுவலர் பசவராஜு பள்ளியை பார்வையிட்டார். சந்திரசேகரை சஸ்பெண்ட் செய்யாவிட்டால் அடித்து விரட்டுவோம் என கல்வி அலுவலரை கிராம மக்கள் எச்சரித்தனர். இதையடுத்து சந்திரசேகர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

The Chennai Silks - Let the Celebrations Begin!

Silk Sarees- Buy Pure Silk and Soft Silk Sarees at The SCM Silk