ரூ. 5½ கோடி மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சி பறிமுதல்..!

மும்பை:

மும்பை விமான நிலையத்தில் ஐந்தரை கோடி ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சி பறிமுதல் செய்யப்பட்டது.

ரூ. 5½ கோடி மதிப்புள்ள வெளிநாட்டு பணத்துடன் மும்பையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சூடான் நாட்டைச் சேர்ந்த அகமது முகமது இஸ்மாயில் ஹராசா மற்றும் இசம் அலி அமர் முகமது ஆகிய இருவரும் மும்பை சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர்.

இதில் 7.24 லட்சம் அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.5.6 கோடி) கைப்பற்றப்பட்டன.

இருவரும் செவ்வாய்கிழமை அதிகாலை 4.05 மணிக்கு அடிஸ் அபாபா செல்லும் எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் விமான நிலையத்தை வந்தடைந்தனர். எனினும், விமான நிலையத்தில் பாதுகாப்புச் சோதனையில் அவர்களது கைப் பையில் வெளிநாட்டு நாணயம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் சி.ஐ.எஸ்.எஃப். அதிகாரிகள் சுங்க அதிகாரிகளுக்கு தகவல் அளித்து இருவரையும் கைது செய்தனர்.

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

"உங்களுடன் ஸ்டாலின்"

திட்ட முகாம்களில் கலந்து கொள்வீர்..! பயன்பெறுவீர்...!