விசேஷ காலங்களில் வீட்டு வாசலில் மாவிலை தோரணம் கட்டுவது ஏன்? பாரம்பரியத்தின் பின்னால் இருக்கும் அறிவியல் ரகசியம்!

விசேஷ காலங்களில் வீட்டு வாசலில் மாவிலை தோரணம் கட்டுவது ஏன்? பாரம்பரியத்தின் பின்னால் இருக்கும் அறிவியல் ரகசியம்!
News Image
<p style="text-align: justify;">வல்லம்: நம் தமிழகப் பண்பாட்டில் திருமணம், காதுகுத்து, புதுமனை புகுவிழா மற்றும் பண்டிகை காலங்களில் வீட்டின் நிலவற்படியில் (வாசலில்) பசுமையான மாவிலைகளைக் தோரணமாகக் கட்டுவது தொன்றுதொட்டுப் பின்பற்றி வரும் ஒரு முக்கிய வழக்கமாகும்.</p> <p style="text-align: justify;">இது வெறும் மங்களகரமான அடையாளம் அல்லது அலங்காரம் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இந்த பாரம்பரிய பழக்கத்திற்குப் பின்னால் ஆழமான, வியக்கத்தக்க அறிவியல் மற்றும் மருத்துவக் காரணங்கள் ஒளிந்துள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா? இதோ அதற்கான அறிவியல் பூர்வமான விளக்கங்கள்:</p> <p style="text-align: justify;"><strong>தடையற்ற ஆக்சிஜன் உற்பத்தி</strong></p> <p style="text-align: justify;">பொதுவாக தாவரங்கள் பகல் நேரத்தில் ஒளிச்சேர்க்கை (Photosynthesis) மூலம் கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சி, ஆக்சிஜனை வெளியிடுகின்றன. இரவில் இந்த செயல்முறை தலைகீழாக மாறும்.</p> <p style="text-align: justify;">ஆனால், மாமரம் போன்ற சில குறிப்பிட்ட மரங்களின் இலைகள், மரத்தில் இருந்து பறிக்கப்பட்ட பின்பும் கூட சில நாட்களுக்குத் தன் ஒளிச்சேர்க்கை திறனை முழுமையாக இழப்பதில்லை.</p> <p style="text-align: justify;">விசேஷ காலங்களில் வீட்டிற்குள் உறவினர்களும், நண்பர்களும் அதிக அளவில் கூடுவதால், அங்கு கார்பன் டை ஆக்சைடு அளவு அதிகரிக்கும்.</p> <p style="text-align: justify;">வாசலில் கட்டப்பட்டிருக்கும் மாவிலைகள், காற்றில் உள்ள கார்பன் டை ஆக்சைடைத் தொடர்ந்து உறிஞ்சி, வீட்டிற்குள் வருபவர்களுக்குத் தேவையான தூய்மையான ஆக்சிஜனை தடையின்றி வழங்குகின்றன.</p> <p style="text-align: justify;"><strong>இயற்கை காற்று சுத்திகரிப்பான்&nbsp;</strong></p> <p style="text-align: justify;">மாவிலைகளுக்கு காற்றில் உள்ள நச்சு வாயுக்களை உறிஞ்சும் தனித்துவமான ஆற்றல் உண்டு.</p> <p style="text-align: justify;"><strong>அறிவியல் உண்மை:</strong> மாமிலையின் மேற்பரப்பில் உள்ள நுண்துளைகள், காற்றில் மிதக்கும் நுண்கிருமிகள், மாசுக்கள் மற்றும் தூசிகளை ஈர்த்து, வீட்டின் உட்புறக் காற்றை சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது. இது ஒரு இயற்கையான ஏர்-பில்டர் (Air Filter) போல செயல்படுகிறது.</p> <p style="text-align: justify;"><strong>பூச்சிக்கொல்லி மற்றும் கிருமிநாசினி பண்புகள்</strong></p> <p style="text-align: justify;">மாவிலையில் உள்ள சிலவகை ஆவியாகக் கூடிய எண்ணெய்ப் பசைகளும் (Essential oils), அதன் நறுமணமும் காற்றில் பரவும் போது, அது ஒரு சிறந்த கிருமிநாசினியாகச் செயல்படுகிறது.</p> <p style="text-align: justify;">விசேஷங்களுக்குப் பலதரப்பட்ட மனிதர்கள் வருவதால் தொற்றுக்கிருமிகள் பரவ வாய்ப்புள்ளது. மாவிழை தோரணம் கிருமிகள் வீட்டிற்குள் நுழைவதைத் தடுக்கிறது.</p> <p style="text-align: justify;">மேலும், இதன் நறுமணம் ஈக்கள், கொசுக்கள் மற்றும் சிறிய பூச்சிகளை வீட்டிற்குள் வராமல் விரட்டும் இயற்கை பூச்சிக்கொல்லியாகவும் அரணாக நிற்கிறது.</p> <p style="text-align: justify;"><strong>மன அமைதியும் நேர்மறை ஆற்றலும்</strong></p> <p style="text-align: justify;">பச்சை நிறம் எப்போதும் மனித மனதிற்கு அமைதியையும், புத்துணர்ச்சியையும் தரக்கூடியது. வாசலில் நுழையும் போதே கண்ணில் படும் பசுமையான மாவிலைகள், வீட்டிற்குள் வருபவர்களின் மன அழுத்தத்தைக் குறைத்து, நேர்மறை எண்ணங்களை (Positive Vibes) உருவாக்குகிறது என்று உளவியல் ரீதியாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.</p> <p style="text-align: justify;">நம் முன்னோர்கள் வகுத்து வைத்த எந்தவொரு சடங்கும் சடங்கிற்காக மட்டும் செய்யப்பட்டவை அல்ல; அவை அனைத்தும் மனிதர்களின் ஆரோக்கியத்தோடு பிணைக்கப்பட்டவை என்பதற்கு இந்த 'மாவிழை தோரணம்' ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இனிவரும் விசேஷ நாட்களிலும் இந்த அறிவியலை உணர்ந்து, பிளாஸ்டிக் தோரணங்களைத் தவிர்த்து, இயற்கையான மாவிலைத் தோரணங்களைக் கட்டி ஆரோக்கியம் காப்போம். நம் முன்னோர்கள் வகுத்து கொடுத்த பாதையில் இருந்து மாறி பயணம் செய்யும் போதுதான் நாம் பிரச்சினைகளை சந்திக்கிறோம். உடல் நலக்குறைவுகள் ஏற்படுகிறது. இனியாவது விழித்துக் கொள்வோம். நம் முன்னோர்கள் பாதையில் ஆரோக்கியமாக பயணம் செய்வோம்.&nbsp;</p>

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks