
<p>சென்னையில், பராமரிப்பு பணிகளுக்காக, நாளை<strong>(14.06.2026)</strong> எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது என்பது குறித்து தற்போது தெரிந்துகொள்ளலாம். பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் நேரத்தில் மின்சாரம் தடை செய்யப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், கீழ் கண்ட பகுதிகளில், <strong>ஜூன் 14-ம்</strong> தேதி, மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.</p>
<p>சென்னையில், பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காக, ஒவ்வொரு மாதமும் மின்வாரியத்தின் தரப்பில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை மாற்றுதல் போன்ற பல்வேறு பராமரிப்பு பணிகள் சுழற்சி முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பராமரிப்பு பணிகளின் போது, சம்பந்தப்பட்ட மின் பாதைகளைச் சேர்ந்த பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு செய்யப்படும். இது தொடர்பாக, அப்பகுதி மக்களுக்கு மின்சார வாரியம் தரப்பிலிருந்து முக்கூட்டியே தகவல் அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், நாளை கீழ்கண்ட பகுதிகளில் பிராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், அப்பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p>
<h2>வல்லம்–வடக்கல் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணி</h2>
<p>வல்லம்–வடக்கல் துணை மின் நிலையத்தின் கீழ் உள்ள பல பகுதிகளில், பராமரிப்புப் பணிகள் காரணமாக மின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி,</p>
<h3>மின் விநியோகம் நிறுத்தப்படும் இடங்கள்</h3>
<ul style="list-style-type: square;">
<li>வல்லம்</li>
<li>வடக்கல்</li>
<li>சிறுகாடு</li>
<li>சாலையனூர்</li>
<li>பாலநல்லூர்</li>
<li>மேட்டுப்பாளையம்</li>
<li>வல்லம்கண்டிகை</li>
<li>ஏச்சூர் மற்றும் அதன் அருகிலுள்ள பகுதிகள்</li>
</ul>
<p><iframe title="TTV for ADMK | TIME TO LEAD? Checkmate to Edappadi.. Will TTV capture the AIADMK? | EPS | TN Poli..." src="https://www.youtube.com/embed/5STC5wzafzM" width="756" height="425" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p>
<p>இப்பகுதிகளில் வசிக்கும் மக்களும், வணிக நிறுவனங்களும், திட்டமிடப்பட்ட மின்வெட்டின் போது, அதற்கேற்ப தங்களது செயல்பாடுகளை திட்டமிட்டு, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p>
<p>மேற்கண்ட இடங்களில் பராமரிப்பு பணிகள் முடிந்த உடன், பிற்பகல் 2 மணிக்குள் மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என மின்சார வாரியம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.</p>
<p> </p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/health/do-not-eat-these-4-things-with-tea-even-by-mistake-know-the-health-risks-263443" width="631" height="381" scrolling="no"></iframe></p>
Source: Read Full Article