
<p class="isSelectedEnd"><span dir="auto">பெய்ரூட்டின் தெற்கு புறநகர் பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து, அனைத்து தரப்பினரும் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். மேலும், பதற்றம் அதிகரித்தால், பிராந்தியத்தில் ஒரு பரந்த அமைதி ஒப்பந்தத்தை உறுதி செய்வதற்கான தற்போதைய முயற்சிகள் சீர்குலைந்துவிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.</span></p>
<h2 class="isSelectedEnd"><span dir="auto">இஸ்ரேலை கண்டித்து ட்ரம்ப் போட்ட பதிவு</span></h2>
<p class="isSelectedEnd"><span dir="auto">இது குறித்து தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் பதிவிட்ட ட்ரம்ப், பேச்சுவார்த்தையாளர்கள் "ஈரானுடன் ஒரு அமைதி ஒப்பந்தத்தை எட்டுவதற்கு மிகவும் நெருக்கமாக" இருந்த ஒரு முக்கியமான தருணத்தில் இந்த தாக்குதல் நடந்ததாகக் தெரிவித்து, "இது நடந்திருக்கக் கூடாது" என்று கூறியுள்ளார்.</span></p>
<p class="isSelectedEnd"><span dir="auto">தன்னைத் தற்காத்துக் கொள்வதற்கான இஸ்ரேலின் உரிமையை மீண்டும் வலியுறுத்திய அதே வேளையில், இஸ்ரேலின் பதிலடிக்குக் காரணமான அந்த சம்பவத்தை ட்ரம்ப் ஒரு சிறிய சம்பவம் என்று கூறியுள்ளார்.</span></p>
<p class="isSelectedEnd"><span dir="auto">"இன்று காலை பெய்ரூட் மீது நடத்தப்பட்ட தாக்குதல் நடந்திருக்கக் கூடாது. குறிப்பாக, ஈரானுடன் அமைதி ஒப்பந்தத்தை எட்டுவதற்கு நாம் மிகவும் நெருக்கமாக இருக்கும் ஒரு சிறப்பு நாளில் இது நடந்திருக்கக் கூடாது. அச்சுறுத்தல்களுக்கு எதிராக தற்காத்துக் கொள்ள இஸ்ரேலுக்கு உரிமை உண்டு. ஆனால், அது பதிலடி கொடுத்த தாக்குதல் மிகவும் சிறியதும் அர்த்தமற்றதும் ஆகும். அதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை, யாரும் கொல்லப்படவில்லை. மேலும், இது இந்த முக்கியமான செயல்முறையைச் சீர்குலைக்கக் கூடாது," என்று அவர் கூறியுள்ளார்.</span></p>
<p class="isSelectedEnd"><span dir="auto"><iframe class="truthsocial-embed" style="max-width: 100%; border: 0;" src="https://truthsocial.com/@realDonaldTrump/116749002714205339/embed" allowfullscreen="allowfullscreen"></iframe>
<script src="https://truthsocial.com/embed.js" async="async"></script>
</span></p>
<p class="isSelectedEnd"><span dir="auto">மேலும், ராணுவ நடவடிக்கைகளை தவிர்க்கவும், பதற்றம் அதிகரிப்பதை தடுக்கவும் அனைத்துத் தரப்பினரையும் அமெரிக்க அதிபர் வலியுறுத்தியுள்ளார். </span><span dir="auto">"லெபனானில் எங்கும் இஸ்ரேல் இனி தாக்குதல்களை நடத்தக்கூடாது, அதேபோல் ஹெஸ்புல்லா உட்பட வேறு எந்த தரப்பும் இஸ்ரேலுக்கு எதிராக தாக்குதல்களை நடத்தக்கூடாது," என்று ட்ரம்ப் கூறியுள்ளார்.</span></p>
<p class="isSelectedEnd"><span dir="auto">பிராந்திய ஸ்திரத்தன்மைக்கான வாய்ப்புகள் குறித்து நம்பிக்கை தெரிவித்த அவர், தற்போதைய தருணம் ஒரு பரந்த திருப்புமுனைக்கு வழிவகுக்கக்கூடும் என்று குறிப்பிட்டுள்ளார். </span><span dir="auto">"இது ஒரு நீண்ட மற்றும் அழகான அமைதியின் தொடக்கமாக இருக்கலாம். அதை நாம் வீணடித்துவிட வேண்டாம்," என்று அவர் மேலும் கூறினார்.</span></p>
<p class="isSelectedEnd"><span dir="auto"><iframe title="CV Sanmugam slams EPS | "பாமக போட்ட பிச்சை! கூட்டணி மட்டும் இல்லனா.." EPS மீது CV சண்முகம் அட்டாக்" src="https://www.youtube.com/embed/rk9vlzEOMVA" width="756" height="425" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></span></p>
<h2 class="isSelectedEnd"><span dir="auto">பெய்ரூட் தாக்குதல் சம்பவம் - இஸ்ரேலின் பதில்</span></h2>
<p class="isSelectedEnd"><span dir="auto">முன்னதாக வெளியான அறிக்கைகளின்படி, லெபனான் தலைநகரின் புறநகர் பகுதியில் உள்ள ஹெஸ்புல்லாவின் கோட்டையாகவும், தஹியே எனவும் அறியப்படும் பெய்ரூட்டின் தெற்கு புறநகர் பகுதிகளில், இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. மேலும், துல்லியமான தாக்குதல்கள் நடத்தியதாக இஸ்ரேலிய ராணுவமும் உறுதிப்படுத்தியுள்ளது.</span></p>
<p><span dir="auto">இதற்கு பதிலளித்துள்ள இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் ஆகியோர், இஸ்ரேலிய பகுதியை நோக்கி ஹெஸ்புல்லா நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தங்களது கூட்டறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளனர்.</span></p>
<p class="isSelectedEnd"> </p>
<p class="isSelectedEnd"><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/health/health-benefits-of-soaked-sabja-seeds-water-consumption-during-summer-263761" width="631" height="381" scrolling="no"></iframe></p>
Source: Read Full Article