
<h3><strong>11 - ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொல்லை</strong></h3>
<p>திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமிக்கு , பெற்ற தந்தையே பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சிறுமியின் தாய் திருத்தணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் தனது கணவர், தன்னுடைய மகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தெரிவித்துள்ளார்.</p>
<h3><strong>மது போதையில் பாலியல் சீண்டல்</strong></h3>
<p>திருத்தணி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் , வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார். இதில் தொடர்புடைய அந்த சிறுமியின் தந்தையான கூலி தொழிலாளி அண்ணாமலை , அவருடைய மகளுக்கு மது போதையில் பாலியல் தொல்லை அளித்ததை உறுதி செய்து போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.</p>
<p>திருத்தணி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட பிறகு , திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து நீதிபதி உத்தரவின் பேரில் பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை அளித்த அண்ணாமலையை புழல் சிறையில் போலீசார் அடைத்துள்ளனர்.</p>
<p>பெற்ற மகளுக்கே தந்தை பாலியல் தொல்லை கொடுத்த இந்த கொடூர செயல், பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>
Source: Read Full Article