
<p><strong>Mayor Priya:</strong> அரசு ப்ரோடோகாலின்படி சட்டமன்ற உறுபினருக்கு பிறகு தான் மேயரே இடம்பெறுவார் என பிரியாவிற்கு தெரியவில்லையா? என தவெகவினர் சாடி வருகின்றனர்.</p>
<h2><strong>எம்.எல்.ஏ., வை மதிக்காத மேயர் பிரியா?</strong></h2>
<p>முதலமைச்சராக <a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/tvk-vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a> பொறுப்பேற்ற பிறகும், சென்னை மேயர் இதுவரை ஒருமுறை கூட நேரில் சந்திக்கவில்லை. உடல்நலன் குறைபாடு காரணமாகவே இதுவரை அரசு முறை சந்திப்பு நிகழவில்லை என மேயர் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், நேற்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாள் தொடர்பான கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தார். இதனால் மாநகராட்சி நிர்வாகம், புதிய ஆளுங்கட்சியுடன் பனிப்போரில் ஈடுபட்டு வருவதாக கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் தான், ஆர்.கே. நகர் பகுதியில் நடைபெற்ற பள்ளிக்கட்டிட திறப்பு விழாவில் அது அம்பலமாகியுள்ளது. த.வெ.க., பெண் எம்.எல்.ஏவை புறக்கணித்து மேயர் பிரியா செயல்பட்டதற்கு கடும் கண்டனங்கள் குவிந்த்து வருகின்றன.</p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/health/amazing-benefits-of-rosemary-water-for-hair-and-scalp-and-overall-health-details-in-pics-262656" width="631" height="381" scrolling="no"></iframe></p>
<h2>எம்.எல்.ஏவிற்கு ப்ரோட்டாகால் தெரியலை - மேயர்</h2>
<p>ஆர்.கே. நகரில் தொகுதி நிதி மேம்பாட்டில் இருந்து கட்டப்பட்ட பள்ளிக் கட்டிடடத்தை திறந்துவைத்து, மேயர் பிரியா குத்துவிளக்கேற்றினார். அடுத்ததாக திரியை ஏற்ற பல்லவி மெழுகுவர்த்தியை கேட்டு கையை நீட்டுகிறார். ஆனால், அவரை நிராகரித்து அவருக்கு பின் நின்றுகொண்டிருந்த ஒரு ஐ.ஏ.எஸ்., அதிகாரியிடம் கொடுத்து குத்துவிளக்கு ஏற்ற சொல்கிறார். இதனால் அதிருப்தி அடைந்த பல்லவி அந்த இடத்தில் இருந்து வெளியேறினார். இதுகுறித்து செய்தியாளர் கேள்வி எழுப்பியபோது, எம்.எல்.ஏவிற்கு ப்ரோட்டோகால் தெரியவில்லை என மேயர் பதிலளித்தார். எனில் உங்களுக்கு ப்ரோட்டோகால் தெரியுமா என செய்தியாளர் கேள்வி எழுப்ப, பிரியா உடனடியாக அங்கிருந்து பதிலளிக்காமல் நகர்ந்தார். இதுதொடர்பாக பேசிய பல்லவி, “ஆணவத்திலும், திமிர் கொண்டும் மேயர் இப்படி நடந்துகொள்வதாக” சாடியிருந்தார்.</p>
<blockquote class="twitter-tweet">
<p dir="ltr" lang="ta">மேயர் VS தவெக எம்எல்ஏ...<br /><br />பள்ளிக் கட்டடம் திறப்பு விழாவில் மேயரின் செயலால் வெளியேறிய தவெக எம்எல்ஏ<a href="https://t.co/wupaoCzH82">https://t.co/wupaoCzH82</a> | <a href="https://x.com/hashtag/Chennai?src=hash&ref_src=twsrc%5Etfw">#Chennai</a> <a href="https://x.com/hashtag/MayorPriya?src=hash&ref_src=twsrc%5Etfw">#MayorPriya</a> <a href="https://x.com/hashtag/MLAPallavi?src=hash&ref_src=twsrc%5Etfw">#MLAPallavi</a> <a href="https://x.com/hashtag/tamilnadu?src=hash&ref_src=twsrc%5Etfw">#tamilnadu</a> <a href="https://x.com/hashtag/tamilnews?src=hash&ref_src=twsrc%5Etfw">#tamilnews</a> <a href="https://x.com/hashtag/abpnadu?src=hash&ref_src=twsrc%5Etfw">#abpnadu</a> <a href="https://t.co/eMi6SSVlKY">pic.twitter.com/eMi6SSVlKY</a></p>
— ABP Nadu (@abpnadu) <a href="https://x.com/abpnadu/status/2062432145428349155?ref_src=twsrc%5Etfw">June 4, 2026</a></blockquote>
<p>
<script src="https://platform.x.com/widgets.js" async="" charset="utf-8"></script>
</p>
<h2><strong>மேயருக்கு பாடமெடுத்த த.வெ.க., எம்.எல்.ஏ.,</strong></h2>
<p>தொடர்ந்து மற்றொரு இடத்தில் வேறொரு கட்டிடத்தை திறந்துவைத்து மேயர் குத்துவிளக்கு ஏற்றினார். அப்போது தாமாக முன் வந்து உடனிருந்த பல்லவியிடம் மெழுவர்த்தியை கொடுத்தார். ஆனால், அவர் அதை வாங்காமல் நீங்களே எல்லா திரியையும் ஏற்றுங்கள் என கூறினார். மீண்டும் மீண்டும் மேயர் வலியுறுத்தியும், விளக்கேற்ற எம்.எல்.ஏ., பல்லவி மறுத்தார். இதையடுத்து அருகிலிருந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரியிடம் மேயர் மெழுகுவர்த்தியை கொடுக்க, அவரும் முதலில் எம்.எல்.ஏ., ஏற்றட்டும் என கூறியுள்ளார். இதனை கண்டதும் எம்.எல்.ஏவின் ஆதரவாளர்கள் கைதட்டி ஆரவாரம் செய்ய மேயர் பிரியா அங்கிருந்து வெளியேறியுள்ளார்.</p>
<p><iframe title="YouTube video player" src="https://www.youtube.com/embed/_bWX_VUGbw4?si=XE5c9lONVAdNySM8" width="560" height="315" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p>
<h2><strong>ப்ரோட்டோகால் என உளறிய மேயர் ப்ரியா..! </strong></h2>
<p>இதனிடையே, சமூக வலைதளங்களிலும் மேயர் பிரியாவை <a title="தவெக" href="https://tamil.abplive.com/topic/tvk" data-type="interlinkingkeywords">தவெக</a>வினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். கட்சிக நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியும் உங்களால், முதலமைச்சரை சந்திக்க முடியாது? சக பெண் மக்கள் பிரதிநிதியை மதிக்க தெரியாது, கேட்டால் ப்ரோட்டோகால் என பேசுவீர்களா? அரசு ஆவணங்களின்படி மக்கள் பிரதிநிதிகளுக்கு பிறகு தான் எந்தவொரு அதிகாரியும் பட்டியலிடப்படுவார். அதிலும், சட்டமன்ற உறுப்பினருக்கு பிறகு தான் மேயருக்கான மரியாதையே வழங்கப்படும். இதுகூட தெரியாமல் எம்.எல்.ஏவை சிறுமைப்படுத்துவதாக கூறி, கண்டதை உளறிவிட்டு மேயர் சமாளிக்கிறார்கள் என சாடி வருகின்றனர். முதல் நிகழ்ச்சியில் மதிக்காமல் ப்ரோட்டோகால் என சொன்ன மேயர், இரண்டாவது நிகழ்ச்சியில் தாமாக முன்வந்து எம்.எல்.ஏவிற்கு மெழுகுவர்த்தியை கொடுத்தது ஏன்? அதற்குள் ப்ரோட்டோகால் மாறிவிட்டதா? இப்படிப்பட்ட நபர்களுக்கு பல்லவியை முன்னெடுத்த மூக்குடைப்பு சம்பவங்கள் தான் சரியான நடவடிக்கை எனவும் களமாடி வருகின்றனர். </p>
Source: Read Full Article