
<p>மதுரையின் காலத்தால் அழியாத பண்பாட்டு பாரம்பரியத்தில் நவீன சௌகரியத்தின் புதிய அடையாளமாக ‘தி ரெசிடென்சி சிக்னேச்சர் மதுரை.</p>
<div dir="auto"> </div>
<div dir="auto"><strong>மதுரையில் புதிய அத்தியாயம்</strong></div>
<div dir="auto"> </div>
<div dir="auto">மதுரையின் சொகுசு விருந்தோம்பல் துறையில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைக்கிறது தி ரெசிடென்சி சிக்னேச்சர் மதுரை. நகரின் வளமான பண்பாட்டு பாரம்பரியத்தையும், உலகத் தர நவீன சொகுசு அனுபவத்தையும் ஒருங்கிணைக்கும் இந்த அற்புத கட்டடக் கலைப் படைப்பு, மதுரையின் அடையாளமாக உருவெடுத்துள்ளது. ஏழு ஏக்கர் பரப்பளவிலும், சுமார் ஐந்து லட்சம் சதுர அடிகளிலும் விரிந்துள்ள இந்த பிரம்மாண்ட வளாகம், தமிழ்நாட்டின் மிகப் பெரிய மற்றும் உயர்தர விருந்தோம்பல் திட்டங்களில் ஒன்றாக திகழ்கிறது. சௌகரியமான தங்கும் அனுபவம், உலகத் தர கொண்டாட்டங்கள், மாநாடுகள் மற்றும் மிகச்சிறந்த உணவு அனுபவங்களை ஒரே இடத்தில் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.</div>
<div dir="auto"> </div>
<div dir="auto"><strong>நவீன கலைநயத்துடன் மறுவடிவமைக்கிறது.</strong></div>
<div dir="auto"> </div>
<div dir="auto">சிங்கப்பூரைச் சேர்ந்த புகழ்பெற்ற கட்டிடக் கலை நிபுணர் வோங் சியூ மேன் (WoW – Warner Wong Architects) வடிவமைத்துள்ள இந்த ஹோட்டல், மதுரையின் கோயில் கட்டடக் கலையின் பிரம்மாண்டத்தை நவீன கலைநயத்துடன் மறுவடிவமைக்கிறது. மூன்று வண்ணங்களைக் கொண்ட போகன்வில்லா மலர்களால் அலங்கரிக்கப்பட்ட முகப்பு அதன் தனித்துவமான தோற்றத்தை உருவாக்குகிறது. மேலும், புகழ்பெற்ற ஆயிரங்கால் மண்டபத்தால் ஈர்க்கப்பட்ட சுமார் 300 தூண்கள், மதுரையின் கட்டடக் கலை பாரம்பரியத்திற்கு மரியாதை செலுத்துகின்றன. புனித நகரமான மதுரையின் மையத்தில் அமைந்துள்ள இந்த ஹோட்டலிலிருந்து, மீனாட்சி அம்மன் கோயிலின் நான்கு ராஜகோபுரங்களையும், திருப்பரங்குன்றத்தையும் பார்த்து ரசிக்க முடிகிறது. மதுரையில் மிகச் சில முகவரிகளுக்கே கிடைக்கும் இந்த காட்சியமைப்பு, இவ்விடத்தின் தனிச்சிறப்பாகும். இந்த வளாகம், சொகுசு ஹோட்டல் மற்றும் பிரம்மாண்ட மாநாட்டு மையம் என இரண்டு தனித்துவமான தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவை இணைந்து தென்னிந்தியாவில் விருந்தோம்பலின் வரையறையை மாற்றியமைக்கிறது. 186 அதிநவீன வசதிகளுடன் கூடிய அறைகள், மாநாட்டு மையத்தில் அமைந்துள்ள 5 பிரத்யேக அறைகள் ஆகியவற்றை இந்த ஹோட்டல் கொண்டுள்ளது. ஒவ்வொரு தங்கும் பிரிவும் விசாலமான இடவசதி, நவீன வசதிகள் மற்றும் சிறப்பான அனுபவத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.</div>
<div dir="auto"> </div>
<div dir="auto"><strong>பல்வேறு வசதிகள்</strong></div>
<div dir="auto"> </div>
<div dir="auto">ஹோட்டலின் அறைகள், நவீன சொகுசின் சிறந்த வெளிப்பாடுகளாக திகழ்கின்றன. சுமார் 2,000 சதுர அடியில் அமைந்துள்ள பிரசிடென்ஷியல் ஸ்யூட், இரண்டு ஆடம்பரமான படுக்கையறைகள், விசாலமான லிவிங் ரூம்கள், தனிப்பட்ட பட்லர் சேவை மற்றும் கோவில் கோபுரங்கள், ஏரியின் மயக்கும் காட்சிகளை வழங்குகிறது.</div>
<div dir="auto">1,500 சதுர அடியில் அமைந்துள்ள எக்ஸிக்யூட்டிவ் ஸ்யூட் மற்றும் விசாலமான லிவிங் ரூம்களுடன் கூடிய கிளப் ஸ்யூட்கள், நேர்த்தியான வடிவமைப்பின் மூலம் உயர்தர தங்கும் அனுபவத்தை வழங்குகின்றன. மதுரையின் பண்பாட்டு அடையாளங்களால் ஈர்க்கப்பட்ட கலை அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ள பிரீமியம் அறைகள், நகரின் மிகப் பெரிய அறை வகைகளில் ஒன்றாகும். ஸ்மார்ட் iPad கட்டுப்பாடுகள், அறை தானியக்க வசதிகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட சொகுசு அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளன. இது போல் ஏகப்பட்ட வசதிகளை இந்த ஹோட்டல் கொண்டுள்ளது. மதுரையில் பிற சொகுசு ஹோட்டல்களில் இல்லாத சொகுசு வசதிகள் இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மதுரை விமான நிலையம் வெளியேவே அமைந்துள்ளதால் முக்கிய பிரமுகர்களின் வரவேற்பை பெரும்.</div>
Source: Read Full Article