
<p style="text-align: justify;"><strong>Thanjavur power cut (23-06-2026):</strong> <strong>தஞ்சாவூர்:</strong> பராமரிப்பு பணிகள் காரணமாக தஞ்சையில், நாளை 23ம் தேதி (செவ்வாய்க்கிழமை) மின்தடை செய்யப்படுகிறது. எந்தெந்த பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது என்பது குறித்து மின்வாரியம் அறிவித்துள்ளது. </p>
<p style="text-align: justify;"><strong>மாதாந்திர பராமரிப்பு பணிகள்</strong></p>
<p style="text-align: justify;">இதுகுறித்து தஞ்சை நகர மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அண்ணாசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் அமைந்துள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (23ம் தேதி) நடைபெற உள்ளது.</p>
<p style="text-align: justify;">இதனால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மருத்துவக்கல்லூரி பகுதிகள், ஈஸ்வரிநகர், முனிசிபல்கா லனி, ஆர்.ஆர்.நகர், புதிய பஸ் நிலையம், புதிய வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, திருவேங்கடம் நகர், கரூப்ஸ்நகர், ஏ.வி.பி.அழகம்மாள் நகர், மன்னர் சரபோஜிநகர், மாதாக் கோட்டை, சோழன்நகர், தமிழ்ப்பல்கலைக்கழகம், வஸ்தாசாவடி, மானோஜிப்பட்டி, ரெட்டிபாளையம்ரோடு, காந்திபுரம், வஹாப்நகர், சப்தகிரிநகர், ராஜலிங்கம் நகர் ஐஸ்வர்யா கார்டன், சுந்தரபாண்டியன்நகர், ஜெபமாலை புரம், மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு மின் வினியோகம் இருக்காது. </p>
<p style="text-align: justify;"><strong>மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை</strong></p>
<p style="text-align: justify;">மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.</p>
<p style="text-align: justify;"><strong>மின்தடை புகாருக்கு என்ன செய்யணும்</strong></p>
<p style="text-align: justify;">மேலும், பொதுமக்கள் மின் தடை குறித்த விவரங்களுக்கு 94987 94987 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.</p>
<p style="text-align: justify;">மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும். இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாக சமாளிக்க முடியும். எனவே நாளை காலை மின்தடையை மறந்திடாம சீக்கரமே உங்கள் தேவைகளை முடிச்சுக்கோங்க. </p>
Source: Read Full Article