
<ul>
<li>17வது பேரவைக்கு தேர்வான MLAக்களுக்கான இரண்டு நாள் புத்தாக்கப் பயிற்சியை இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் <a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/tvk-vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a> - பேரவை விதிகள், சட்டப்பேரவைக்குள் உறுப்பினர்கள் எப்படி செயல்படுவது உள்ளிட்டவை குறித்து MLAக்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படும்.</li>
<li>சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 10 ரூபாய் குறைந்து 14.060 ரூபாய்க்கும், சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து 1,11,480 ரூபாய்க்கு விற்பனை</li>
<li>திருச்செங்கோடு அடுத்த மல்லசமுத்திரம் பேரூராட்சியின் அரசு சமுதாய சுகாதார நிலையத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் ஆய்வு</li>
<li>கும்மிடிப்பூண்டியில் 3 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பிபின் மஞ்சு புழல் சிறையில் அடைப்பு</li>
</ul>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/personal-finance/there-are-many-benefits-to-submitting-your-itr-by-july-31st-details-in-pics-264020" width="631" height="381" scrolling="no"></iframe></p>
<ul>
<li>கும்மிடிப்பூண்டியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்ட 3 வயது குழந்தையின் பெற்றோரிடம் தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.8 லட்சம் இழப்பீட்டுக்கான ஆணையை வழங்கினார் அமைச்சர் குமார்</li>
<li>நெல்லையில் 16 வயது சிறுமியிடம் திருமணம் செய்துகொள்வதாக கூறி அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்த பெருமாள் (28) என்பவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு</li>
<li>“தங்களது குழந்தைகளை பலி கொடுக்கவா உங்களுக்கு ஆட்சி அதிகாரத்தைத் தந்தார்கள்?” அதிகரிக்கும் பெண்கள், பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் - கிருஷ்ணசாமி விமர்சனம்</li>
<li>காஞ்சிபுரம்: ஒரகடம் அருகே தத்தனூரில் வீட்டில் ஏற்பட்ட தீயால் அங்கிருந்த சிலிண்டர் வெடித்து விபத்து - 7 பேர் படுகாயம்</li>
<li>நெல்லை: மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி- வெள்ளப்பெருக்கு காரணமாக கடந்த 12 நாட்களாக அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது</li>
<li>அரக்கோணத்தில் கூட்டுறவு மேலாண்மை துணை பயிற்சி நிலையம் அமைக்க அதற்கான தற்காலிக இடத்தை ஆய்வு செய்தார் அமைச்சர் வி.காந்திராஜ்</li>
<li>மீன்பிடித் தடைக்காலம் நிறைவு - தூத்துக்குடியில் ஒரே நாளில் ரூ.2 கோடிக்கு மீன் வர்த்தகம்.. மீன்களுக்கு நல்ல விலை கிடைத்ததால் மகிழ்ச்சியில் மீனவர்கள்..!</li>
</ul>
Source: Read Full Article