
<p>வெனிசுலா நாட்டில் யாரும் எதிர்பாராத நேரத்தில் திடீரென ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கத்தால் 32 பேர் பலியாகி உள்ளதாக அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தில் இருந்து 1 லட்சம் வரை உயரக்கூடும் என்று தகவல் வெளியாகி உள்ளது.</p>
<h2><strong>தலைநகரில் ஏற்பட்ட திடீர் பூகம்பம்</strong></h2>
<p>வெனிசுலாவின் தலைநகரான கராகஸ் பகுதியில் புதன்கிழமை மாலை உள்ளூர் நேரப்படி 6.04 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏராளமானோர் பலியாகி உள்ளனர். கட்டிடங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன. அன்று தேசிய விடுமுறை நாள் என்பதாலும் மாலை நேரம் என்பதாலும் ஏராளமானோர் கட்டிடங்களுக்கு உள்ளே இருந்துள்ளனர். </p>
<p>இரட்டை பூகம்பத்தால் அதிகாரப்பூர்வமாக 32 பேர் இறந்துள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. 71 மற்றும் 7.5 அளவுகோலில் அடுத்தடுத்து 35 நொடிகள் இடைவெளியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.</p>
<h2><strong>உயிரிழப்புகள் கடுமையாக இருக்கலாம்</strong></h2>
<p>இந்தப் பேரழிவு, ஏற்படுத்தும் உயிரிழப்புகள் குறித்த அச்சம் அதிகரித்துள்ளது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) வெளியிட்டுள்ள முதல்கட்ட மதிப்பீட்டின்படி, உயிரிழப்புகள் கடுமையாக இருக்கலாம் என்று தெரிகிறது.</p>
<p>அந்த அறிக்கையின்படி, "அதிக உயிரிழப்புகளும், கடுமையான சேதங்களும் ஏற்பட வாய்ப்புள்ளன. மேலும், இந்தப் பேரழிவு பரவலாக இருக்கக்கூடும். உயிரிழப்புகள் 10,000 முதல் 100,000 வரை இருக்கலாம் என்றும், இறப்பு எண்ணிக்கை 10,000-ஐத் தாண்டுவதற்கு 44% சாத்தியக்கூறு உள்ளது என்றும் கணிக்கப்பட்டுள்ளது.</p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/auto/how-far-can-a-honda-activa-go-if-its-tank-is-fully-filled-264975" width="631" height="381" scrolling="no"></iframe></p>
Source: Read Full Article