​பாமக-வில் பெருத்த திருப்பம்: திருமண நாளில் கட்டிப்பிடித்து அழுத ராமதாஸ்; காலில் விழுந்து ஆசி பெற்ற அன்புமணி!

​பாமக-வில் பெருத்த திருப்பம்: திருமண நாளில் கட்டிப்பிடித்து அழுத ராமதாஸ்; காலில் விழுந்து ஆசி பெற்ற அன்புமணி!
News Image
<p>தைலாபுரம் : தமிழக அரசியல் வட்டாரத்திலும், பாட்டாளி மக்கள் கட்சியிலும் கடந்த சில மாதங்களாக நீடித்து வந்த மிக முக்கியமான உட்கட்சி மோதலும், தந்தை - மகன் இடையேயான பனிப்போரும் தற்போது சுமுகமான முடிவுக்கு வந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p> <p>சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தலில், பாமக வரலாற்றிலேயே இல்லாதவாறு இரண்டு அணிகளாகப் பிரிந்து போட்டியிட்டது. கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் ஒரு அணியாகவும், அக்கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் மற்றொரு அணியாகவும் செயல்பட்டனர். இந்த உச்சக்கட்ட மோதல் காரணமாக கட்சிக்குள் ஏற்பட்ட பிளவினால், கடந்த தேர்தலில் பாமகவால் எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியவில்லை.</p> <h2>தேர்தல் தோல்வியும்... ராமதாஸின் மௌனமும்:</h2> <p>தேர்தல் தோல்விக்குப் பிறகு, மருத்துவர் ராமதாஸ் செய்தியாளர்களைச் சந்திப்பதைத் தொடர்ந்து தவிர்த்து வந்தார். அதேபோல், அன்புமணி ராமதாஸை விமர்சிப்பதையும் அவர் அடியோடு நிறுத்திக்கொண்டார். எனினும், மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளுக்காகத் தனது அறிக்கை வாயிலாகத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார்.</p> <p>அதேவேளையில், ராமதாஸின் மூத்த மகளும் கட்சியின் செயல் தலைவருமான ஸ்ரீகாந்தியும் தனியாக அறிக்கைகளை வெளியிட்டு வந்தார். இதனிடையே, தைலாபுரம் தோட்டத்திற்குத் தொடர்ந்து வருகை தந்து கொண்டிருந்த பாமக கௌரவத் தலைவர் ஜி.கே.மணி, சேலம் மேற்கு முன்னாள் எம்எல்ஏ அருள் உள்ளிட்ட முன்னணி நிர்வாகிகளும், ராமதாஸுடனான அடிக்கடி சந்திப்பதைத் தவிர்த்து வந்தனர்.</p> <p>ஒருங்கிணைந்த பாமகவால் மட்டுமே எதிர்காலத்தில் சிறப்பாகச் செயல்பட முடியும் எனக் கருதியே இந்த முன்னணி தலைவர்கள் தற்காலிகமாக ஒதுங்கியிருப்பதாக அக்கட்சி வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகின.</p> <h2>"போகிறவர்கள் போகலாம்..." - ராமதாஸின் அதிரடி:</h2> <p>இதேபோல், பாமகவை மீண்டும் வலுப்படுத்த வேண்டுமெனில், கிளை வாரியாகச் சென்று கட்சியினரையும் தொண்டர்களையும் நிர்வாகிகள் நேரில் சந்தித்துப் பேச வேண்டும் என்ற கோரிக்கையை ராமதாஸைச் சந்தித்த இரண்டாம் கட்ட நிர்வாகிகள் வலியுறுத்தினர். அதற்குப் பதிலளித்த ராமதாஸ், "கட்சியை மீட்கும் போராட்டத்தை நான் தொடர்ந்து முன்னெடுப்பேன். என்னுடன் இருக்கிறவர்கள் இருக்கலாம்... போகிறவர்கள் போகலாம்..." என அதிரடியாகக் கூறியிருந்தார்.</p> <p>இதனிடையே, பாமக பொதுக்குழுவால் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அன்புமணியின் தலைவர் பதவிக்காலம் இந்த 2026 ஆகஸ்ட் மாதத்துடன் முடிவடைய உள்ளது. ஏற்கனவே "பாமக கட்சி யாருக்கு சொந்தம்?" என்பது தொடர்பான வழக்கு சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், அடுத்தடுத்து இந்த வழக்கில் பெரிய திருப்பங்கள் ஏற்படலாம் என அக்கட்சிக்குள் பலத்த விவாதங்கள் பரவி வந்தன.</p> <h2>திருமண நாளில் நிகழ்ந்த நெகிழ்ச்சிச் சந்திப்பு:</h2> <p>இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலுக்கு இடையே, மருத்துவர் ராமதாஸ் - சரஸ்வதி அம்மையாரின் 61-ஆம் ஆண்டு திருமண நாள் இன்று தைலாபுரம் தோட்டத்தில் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, <a title="சபரிமலை" href="https://tamil.abplive.com/topic/sabarimala" data-type="interlinkingkeywords">சபரிமலை</a>க்குச் சென்று திரும்பியிருந்த அன்புமணி ராமதாஸ், தனது குடும்பத்தினருடன் தைலாபுரத்திற்கு 4 கார்களில் வந்து தனது பெற்றோரைச் சந்தித்தார்.</p> <p>அவருடன் அவரது மனைவி சௌமியா அன்புமணி வந்திருந்தார். மேலும், அன்புமணியின் மகள் சங்கமித்ராவுக்குச் சமீபத்தில்தான் குழந்தை பிறந்தது. அவரும் தனது குழந்தையுடன் (ராமதாஸின் கொள்ளுப் பேரன்/பேத்தி) தைலாபுரம் வந்திருந்தார். அவர்களைத் தைலாபுரம் தோட்டத்தில் ஆரத்தி எடுத்து முறைப்படி வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றனர்.</p> <h2>கட்டிப்பிடித்து அழுத தந்தை - மகன்:</h2> <p>நீண்ட நாட்களுக்குப் பிறகு நேரில் பார்த்த தனது மகன் அன்புமணியை, தந்தை ராமதாஸ் உணர்ச்சிவசப்பட்டுக் கட்டியணைத்து அழுதார். இந்த சந்திப்பின்போது ராமதாஸின் காலில் விழுந்து அன்புமணி ராமதாஸும், சௌமியா அன்புமணியும் ஆசி பெற்றனர். சுமார் 2.30 மணி நேரம் நீடித்த இந்த நீண்ட சந்திப்பின் மூலம் ராமதாஸ் - அன்புமணி இடையேயான நீண்டகால கருத்து வேறுபாடுகள் மற்றும் மோதல்கள் முழுமையாக முடிவுக்கு வந்ததாகத் தைலாபுரம் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p> <p>ராமதாஸ் - அன்புமணி சந்திப்பின்போது சௌமியா அன்புமணி மற்றும் குடும்பத்தினர் என அனைவரும் நெகிழ்ச்சியில் கண்கலங்கியுள்ளனர்.</p> <p>தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அன்புமணி ராமதாஸ்., தந்தை தாய் திருமண நாளை முன்னிட்டு ஆசீர்வாதம் பெற வந்தேன் என்றும் இனி அனைத்தும் நல்லவையாக நடக்கும் என தெரிவித்தார்.</p> <p>இந்த குடும்ப மறுசந்திப்பின் மூலம் பாமகவுக்குள் நிலவி வந்த பிளவுகளும், நீதிமன்ற வழக்குகளும் முடிவுக்கு வந்து, கட்சி மீண்டும் புத்துயிர் பெறும் என தொண்டர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தற்போது தைலாபுரம் தோட்டம் மற்றும் பாமக வட்டாரம் முழுவதும் மிகுந்த பரபரப்புடனும் மகிழ்ச்சியுடனும் காணப்படுகிறது.</p> <p>&nbsp;</p> <p>&nbsp;</p>

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks