
<h3 dir="ltr"><strong>முகம் சிதைந்த நிலையில் மூதாட்டி உடல்</strong></h3>
<p dir="ltr">நாகப்பட்டினம் மாவட்டம் அண்ணாசிலை அமைந்துள்ள நகரின் மையப் பகுதி அருகே மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இதன் அருகே 80 வயது நிறைந்த மூதாட்டி ஒருவர் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தது கிடப்பதாக வெளிப்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.</p>
<p dir="ltr">இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உயிரிழந்த மூதாட்டியின் உடலை ஆய்வு செய்த போது இறந்த கிடந்த மூதாட்டியின் முகம் நாய் கடித்து சிதைந்து இருப்பது போல தெரிய வந்தது.</p>
<p dir="ltr">இது குறித்து வெளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக நாகப்பட்டினம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.</p>
<h3><strong>தொடர்ந்து நடத்திய விசாரணையில் ;</strong></h3>
<p>இறந்த மூதாட்டி நாகப்பட்டினம் வடக்கு நல்லியான் தோட்டத்தை சேர்ந்த 80 வயதுடைய சின்னப்பொண்ணு என்பதும், அவர் அப்பகுதியிலேயே தங்கி நீண்ட காலமாக மீன் வியாபாரம் செய்து வந்ததும் தெரிய வந்தது.</p>
<p>இறப்பு குறித்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் சேகரித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றி திரிந்த முதியவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.</p>
<h3><strong>பாலியல் அத்து மீறல் </strong></h3>
<p>அந்த முதியவர் நாகப்பட்டினம் சட்டையப்பர் வீதியில் உள்ள தனியார் ஹோம்மில் தங்கி மீன் வியாபாரம் செய்வது தெரிய வந்தது. மேலும் ராமசாமி மீன் வாங்க வரும் போது மூதாட்டி சின்ன பொண்ணுவிடம் அவ்வப்போது இரட்டை அர்த்தத்தில் பேசி வந்ததும் தெரிய வந்தது. மேலும் சம்பவத்தன்று இரவு அப்பகுதியில் மூதாட்டி தனியாக இருப்பதை கவனித்த ராமசாமி சின்ன பொண்ணுவிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட முயற்சித்துள்ளார்.</p>
<p>அதற்கு மூதாட்டி ஒத்துழைக்காததால் அவரது தலையில் கல்லை போட்டு கொலை செய்து விட்டு பலாத்காரம் செய்தது விசாரணையில் வெளி வந்துள்ளது.</p>
<p>இதை தொடர்ந்து ராமசாமியை கைது செய்த போலீசார் அவரை நாகப்பட்டினம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். இதனை விசாரித்த நீதிபதி ராமசாமியை வரும் 24 - ம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையெடுத்து அவர் நாகப்பட்டினம் மாவட்ட சிறைச் சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். தனியாக மீன் வியாபாரம் செய்து வந்த மூதாட்டியை கொன்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>
Source: Read Full Article