
<p><span dir="auto"><strong>US Iran War:</strong> தெற்கு லெபனான் முழுவதும் இன்று நடைபெற்ற இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில், குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டதாக லெபனான் அரசு ஊடகங்களை மேற்கோள் காட்டி அசோசியேட்டட் பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. சுவிட்சர்லாந்தில் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே திட்டமிடப்பட்டிருந்த பேச்சுவார்த்தைகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது, சமீபத்தில் கையெழுத்திடப்பட்ட அமைதி ஒப்பந்தத்தின் நிலைத்திருக்குமா என்ற சந்தேகங்களை எழுப்பியுள்ளது.</span></p>
<p><span dir="auto">தெற்கு லெபனானில் இரவு முழுவதும் பல இலக்குகள் மீது தங்கள் படைகள் தாக்குதல் நடத்தியதாகவும், நடவடிக்கைகள் தொடர்வதாகவும் இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது. லெபனான் உட்பட அனைத்து முனைகளிலும் ராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என அமெரிக்க-ஈரான் ஒப்பந்தம் கோரும் சூழலில், ஈரான் ஆதரவு ஹெஸ்புல்லா குழுவுடன் மீண்டும் மோதல்கள் தொடங்கியுள்ள நிலையில், இந்த தாக்குதல்கள் நடந்துள்ளன.</span></p>
<h2><span dir="auto">அமைதி ஒப்பந்தத்திற்கு சவாலாக அமைந்த தாக்குதல்</span></h2>
<p class="isSelectedEnd"><span dir="auto">இஸ்ரேலியர்களின் சமீபத்திய தாக்குதல்களில் குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டதாக லெபனானின் அரசுக்கு சொந்தமான தேசிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. </span><span dir="auto">பல மாத கால மோதலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதையும், லெபனானின் "பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையைப்" பாதுகாப்பதற்கான உறுதிமொழிகளை உள்ளடக்கியிருக்கும் அமெரிக்க-ஈரான் ஒப்பந்தத்திற்கு இந்த தாக்குதல் சம்பவம் ஒரு சவாலாக அமைகிறது. </span></p>
<p class="isSelectedEnd"><span dir="auto">இதனிடையே, ஹெஸ்புல்லாவின் அச்சுறுத்தல்கள் அகற்றப்படும் வரை, இஸ்ரேலிய படைகள் லெபனானில் நிலைத்திருக்கும் என்று இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.</span></p>
<h2><span dir="auto">ஒத்திவைக்கப்பட்ட சுவிட்சர்லாந்து பேச்சுவார்த்தைகள்</span></h2>
<p><span dir="auto">இன்று சுவிட்சர்லாந்தில் நடைபெறவிருந்த, அமெரிக்க மற்றும் ஈரானிய பேச்சுவார்த்தையாளர்களுக்கு இடையேயான தொழில்நுட்பப் பேச்சுவார்த்தைகள் ஒத்திவைக்கப்பட்ட அதே நேரத்தில், இந்த தாக்குதல் சம்பவமும் நிகழ்ந்தது.</span></p>
<p><span dir="auto">அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன் ஆகியோரால் இந்த வாரத் தொடக்கத்தில் கையெழுத்திடப்பட்ட 14 அம்ச புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செயல்படுத்துவது குறித்து விவாதிப்பதே இந்த பேச்சுவார்த்தைகளின் நோக்கமாக இருந்தது.</span></p>
<p><span dir="auto">இந்நிலையில், திட்டமிட்டபடி பேச்சுவார்த்தைகள் நடைபெறாது என்று சுவிட்சர்லாந்தின் வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தியது. ஆனால் அதற்கான விரிவான விளக்கத்தை அளிக்கவில்லை. </span><span dir="auto">அமெரிக்கத் தூதுக்குழுவிற்கு தலைமை தாங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சுவிட்சர்லாந்து பயணத்தை ஒத்தி வைத்தார் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ். அதைத் தொடர்ந்தே இந்த அறிவிப்பு வெளியானது.</span></p>
<p><span dir="auto"><iframe title="Udhayanidhi stalin vs Vijay | "இத கண்டிப்பா பண்ணுங்க CM" கோரிக்கை வைத்த உதயநிதி! உடனே OK சொன்ன <a title=" data-type="interlinkingkeywords"><a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/tvk-vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a>" src="https://www.youtube.com/embed/RuX_jQHyQO8" width="696" height="391" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></span></p>
<h2><span dir="auto">இஸ்ரேலின் நடவடிக்கைகளால் சிக்கல்</span></h2>
<p class="isSelectedEnd"><span dir="auto">ஒத்திவைக்கப்பட்ட இந்த பேச்சுவார்த்தை, பரந்த அமைதி முன்னெடுப்பின் எதிர்காலம் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது; குறிப்பாக, போர்நிறுத்த விதிகளை மீறி, இஸ்ரேல், ஹெஸ்புல்லாவிற்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளை தொடர்ந்து வருவதால் இந்த கேள்விகள் எழுந்துள்ளன.</span></p>
<p class="isSelectedEnd"><span dir="auto">அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தைகளில் இஸ்ரேல் நேரடியாக பங்கேற்கவில்லை. மேலும், அந்த ஒப்பந்தத்தின் சில அம்சங்களிலிருந்து அது பகிரங்கமாக தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளது. </span><span dir="auto">ஒப்பந்தம் கையெழுத்தானதைத் தொடர்ந்து, "தற்போதைய தருணத்தில் இஸ்ரேல் தேசத்தின் மீது அனுதாபம் கொண்ட ஒரே நாட்டுத் தலைவர் ட்ரம்ப் மட்டுமே" என்று வான்ஸ் எச்சரித்துள்ளார்.</span></p>
<p><span dir="auto">இப்படிப்பட்ட சூழலில், லெபனானில் தாக்குதல்கள் தொடர்வதாலும், பேச்சுவார்த்தைகள் முடங்கியுள்ளதாலும், போர் நிறுத்தம் ஒரு நீடித்த அமைதி ஒப்பந்தமாக உருவாகுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஏற்கனவே, இஸ்ரேலை ட்ரம்ப் எச்சரித்துள்ள நிலையில், தற்போது நடந்துள்ள இந்த தாக்கதல் சம்பவத்திற்கு அவர் எவ்வாறு எதிர்வினையாற்றுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.</span></p>
<p> </p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/health/7-foods-to-avoid-after-eating-mango-264342" width="631" height="381" scrolling="no"></iframe></p>
Source: Read Full Article