பெரியபாளையம் ஆலை மூடல்; 23 பேருக்கு தீவிர சிகிச்சை- உரிமையாளர் கைது, அமைச்சர்கள் ஆறுதல்

பெரியபாளையம் ஆலை மூடல்; 23 பேருக்கு தீவிர சிகிச்சை- உரிமையாளர் கைது, அமைச்சர்கள் ஆறுதல்
News Image
<p>பெரியபாளையம் இறால் தொழிற்சாலையில் நடந்த வாயு விபத்தை அடுத்து, 23 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யப்பட உத்தரவு பிறப்பித்துள்ளது.</p> <p>இந்த விபத்தில் 9 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல 23 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.</p> <p>இந்த துயர நிகழ்வில் 70-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு, சிகிச்சையில் உள்ளனர். இதில் இரு வேறு தனியார் மருத்துவமனைகளில் 60-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னை ராஜீவ் காந்தி, <a title="ஸ்டாலின்" href="https://tamil.abplive.com/topic/mk-stalin" data-type="interlinkingkeywords">ஸ்டாலின்</a> மருத்துவமனையில் 10 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.</p> <h2><strong>அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா, குமார் நேரில் ஆறுதல்</strong></h2> <p>அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா, ராஜ் மோகன், குமார் ஆகியோர் மருத்துவமனைக்குச் சென்று ஆறுதல் தெரிவித்ததுடன், சிகிச்சை விவரங்களை கேட்டறிந்தனர். உரிய சிகிச்சை அளிக்கவும் வலியுறுத்தி உள்ளன.&nbsp;</p> <p><strong>ஆலை உரிமையாளர்கள் கைது</strong></p> <p>இந்த சம்பவத்தில் ஆலை உரிமையாளர் மோகன், நிர்வாகி டேனியல் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p> <p><iframe title="YouTube video player" src="https://www.youtube.com/embed/X9SwfZMX02E?si=NGpS0HWl-Te8QRFz" width="560" height="315" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p> <h2><strong>நடந்தது என்ன?</strong></h2> <p>திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த கன்னிகைபேர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான இறால் பதப்படுத்தும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இதில் பல்வேறு மாநிலங்களில் இருந்து சுமார் 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அங்கேயே தங்கி பணியாற்றி வருகின்றனர்.</p> <p>இந்த நிலையில் இன்று காலை சுமார் நூற்றுக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் திடீரென அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது. சுமார் 70-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மூக்கு மற்றும் வாயில் ரத்த கசிவு ஏற்பட்டது.&nbsp;</p> <p>இதில் அவர்கள் அனைவரும் மயங்கிய நிலையில், தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு மஞ்சங்கரணை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் செங்குன்றத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.</p> <h2><strong>ஆட்சியர் நேரில் ஆய்வு</strong></h2> <p>இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கவிதா தொழிற்சாலையில் ஆய்வு செய்த பின் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தொழிலாளர்களை நேரில் சென்று பார்வையிட்டு மருத்துவர்களிடம் சிகிச்சைக்கான விவரங்களை கேட்டறிந்தார்.</p> <p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/health/will-eating-rice-at-night-make-you-gain-weight-264612" width="631" height="381" scrolling="no"></iframe></p>

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks