
<ul>
<li>கர்நாடகாவில் உள்ள கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் இன்று பிற்பகல் வழிபாடு நடத்துகிறார் முதலமைச்சர் <a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/tvk-vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a> - விரைவில் மீண்டும் சீரடி சாய்பாபா கோவிலுக்கு செல்லவும் முதலமைச்சர் திட்டமிட்டுள்ளதாக தகவல்</li>
<li>சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.2,400 உயர்ந்து, ரூ.1,10,400-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.300 உயர்ந்து ரூ.13,800-க்கு விற்பனையாகிறது.</li>
<li>வைத்திலிங்கம் மீதான ரூ.27.9 கோடி லஞ்ச வழக்கை மறு விசாரணை செய்ய லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் அருண் அதிரடி உத்தரவு</li>
</ul>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/sports/fifa-world-cup-2026-total-prize-money-pool-breakdown-details-in-pics-263566" width="631" height="381" scrolling="no"></iframe></p>
<ul>
<li>அரசியலில் நுழைய உள்ளதாக பிரபல நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் அறிவிப்பு</li>
<li>“மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்படாததால் குறுவை சாகுபடியை கிட்டத்தட்ட கைவிட வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். இந்த சூழலில் விவசாயிகளை காப்பாற்ற டெல்டா பாசனப் பகுதிகளை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவித்து நிவாரண உதவிகளை வழங்க வேண்டும்” - பாமக தலைவர் அன்புமணி</li>
<li>தொடர் மின்வெட்டால் விவசாயம் கடும் பாதிப்பு - அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா அறிக்கை</li>
<li>"அ.தி.மு.க என்பது எங்கள் பங்காளி கட்சிதான்" - திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன்</li>
<li>சென்னை அயனாவரத்தில் இன்று அதிகாலை வீடு புகுந்து 63 வயது மூதாட்டியிடம் தவறாக நடக்க முயன்றதாக புகார் உ.பி.யைச் சேர்ந்த யோகேஷ் (45) என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை</li>
<li>மதுரை: அரசு பேருந்து ஒட்டுநரை பட்டா கத்தியால் வெட்டிய <a title="தவெக" href="https://tamil.abplive.com/topic/tvk" data-type="interlinkingkeywords">தவெக</a> நிர்வாகி கைது</li>
<li>இளம் வயதில் சிம்பொனி இசையை உருவாக்கி, பதிவு செய்துவிட்டு லண்டனில் இருந்து திரும்பிய லிடியன் நாதஸ்வரம் விமான நிலையத்தில் அமைச்சர்கள் ராஜ்மோகன், வன்னிஅரசு உள்ளிட்டோர் வரவேற்பு</li>
<li>சிதம்பரம் அருகே குடும்பப் பிரச்னையில் எறும்புக் கொல்லி பூச்சி மருந்தை சாப்பிட்ட இளைஞர்; மெடிக்கலில் வைத்து அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சையில் உயிரிழந்த துயரம்</li>
<li>நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் தோட்டத்து வீட்டில் தனியே இருந்த பெண்ணிடம் துப்பாக்கி, கத்தியைக் காட்டி மிரட்டி 19 சவரன் நகைகள் கொள்ளை</li>
<li>ஆவடியில் 4 மணி நேரமாக மின்வெட்டு; ஆத்திரமடைந்த பொதுமக்கள் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்</li>
<li>கடலூர் மாவட்டத்தில் 4 ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க அனுமதி கோரி இந்துஸ்தான் ஆயில் நிறுவனம் விண்ணப்பம்</li>
</ul>
Source: Read Full Article