
<p>ஆண்டு முழுவதும் விளையாட்டு விடுதி திறந்து இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆர்வம் உள்ள மாணவிகள் விளையாட்டு பயிற்சியை மேற்கொள்ளலாம் என்று திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் நேரில் ஆய்வு செய்த நெடுஞ்சாலைகள் துறை, பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறினார்.</p>
<p>திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் பொதுப்பணிகள் மற்றும் நெடுஞ்சாலைத்துறை மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் அர்ஜுனா இன்று காலை 7:00 மணி அளவில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது மாவட்ட விளையாட்டு அரங்கில் உள்ள உடற்பயிற்சி கூடம் பராமரிப்பு பணிகளை நேரில் பார்வையிட்டார். பின்னர் வாலிபால் அரங்கில் ஸ்கேட்டிங் விளையாடிய மாணவிகளை சந்தித்து உரையாடினார். மேலும் வாலிபால் அரங்கில் வாலிபால் விளையாடினார்.</p>
<p> </p>
<p><iframe title="YouTube video player" src="https://www.youtube.com/embed/yIavS91ppt0?si=9xiASSTVlnnzff6g" width="560" height="315" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p>
<p>இதன் பின்பு விளையாட்டு அரங்கில் விளையாட்டு பயிற்சிகளை மேற்கொள்ளும் மாணவிகளுடன் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உரையாடினார். இந்த உரையாடலின்போது, மாணவிகளுக்கு அளிக்கப்படும் பயிற்சிகள், உணவுகள் மற்றும் தேவைப்படும் அடிப்படை வசதிகள் குறித்து மாணவிகளிடம் கேட்டறிந்தார்.</p>
<p>மேலும், மாணவிகளுக்கு சர்வதேச அளவிலான பயிற்சிகள், உணவு, காலை பயிற்சி மேற்கொண்ட உடன் ஒரு மணி நேரம் ஓய்வு எடுக்க உரிய அனுமதியை அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் வருடம் முழுவதும் மாணவிகளின் தங்கும் விடுதிகள் இயங்கப்படும் என்றும் ஆர்வம் உள்ள மாணவிகள் விளையாட்டு விடுதியில் தங்கி பயிற்சிகளை மேற்கொள்ளலாம் என்றும் பயிற்சி எடுக்கும் மாணவிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் பிசியோதெரபிஸ்ட் உடன் இருக்கவும், பத்து நாட்களுக்கு ஒரு முறை வீரர்களின் உடல் பரிசோதனை செய்யும் வகையில் பிசியோதெரபிஸ்ட் பணியை மேற்கொள்ள உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், தமிழ்நாடு முழுவதும் 47 புதிய விளையாட்டு விடுதிகள் அமைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், விளையாட்டு மாணவர்களுக்கு தேவைப்படும் அனைத்து அடிப்படை வசதிகள், மூன்று மாதத்திற்கு ஒரு முறை விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய பெட்டகம், காலனி, உள்ளிட்டவைகள் வழங்கப்படும் என்றும் நீங்கள் விளையாட்டு பயிற்சியை உரிய முறையில் மேற்கொண்டு மாநில அளவிலும் தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் சிறந்த விளையாட்டு வீரர்களாக உருவாக்க வேண்டும் என மாணவிகளுடன் உரையாற்றினார். </p>
<p><a href="https://tamil.abplive.com/news/politics/inquiry-committee-report-listing-the-reasons-for-the-dmk-s-defeat-263607" target="_blank" rel="noopener">Also Read| DMK ELECTION RESULT: திமுகவின் தேர்தல் தோல்விக்கு காரணம் இது தான்.! பட்டியலிட்ட குழு - சாட்டையை சுழற்ற தயாராகும் ஸ்டாலின்</a></p>
<p>மேலும் மாணவிகள் நிகழ்த்திய மல்லர் கம்பம் விளையாட்டு நிகழ்ச்சியை கண்டு களித்தார். 10 கோடி 50 லட்சம் ரூபாய் மதிப்பில் சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்டுள்ள செயற்கை ஹாக்கி விளையாட்டு அரங்கை பார்வையிட்டார். மாணவி விடுதியில் உள்ள வசதிகள் குறித்தும் விடுதியில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் மாவட்ட விளையாட்டு அரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் நீச்சல் பயிற்சி வழங்கப்படுவதை ஆய்வு செய்து நீச்சல் வீரர்களிடம் உரையாடினார்.</p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/health/why-goosebumps-happens-know-the-reason-in-tamil-263485" width="631" height="381" scrolling="no"></iframe></p>
Source: Read Full Article