
<p style="text-align: justify;">இன்று சட்டப்பேரவை கூடியதும் தமிழ்த்தாய் வாழ்த்தை அரசு நிகழ்ச்சிகளில் முதலில் பாட வேண்டும் என்ற தீர்மானத்தை கொண்டுந்தார் முதல்வர் விஜய். அதில் முதல்வர் விஜய் உள்ளிட்ட அனைவரும் பேசிய பின்னர், தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது. இதனையடுத்து நெல் மற்றும் கரும்பிற்கான ஊக்கத் தொகையை 110 விதியின் கீழ் அறிவித்தார் முதல்வர் விஜய்.</p>
<p style="text-align: justify;">இதனையடுத்து பேச எழுந்த முன்னாள் வேளாண் அமைச்சரும் திமுக எம்.எல்.ஏவுமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சுவையான செய்திகளை பகிர்து பேரவையை கலகலப்பாக்கினார். இதனைக் கேட்ட முதல்வர் விஜய் உள்ளிட்ட உறுப்பினர்களும் புன்னகை பூத்தனர்.</p>
<p style="text-align: justify;"><strong><em> </em></strong><strong><em>எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசியது என்ன ?</em></strong></p>
<p style="text-align: justify;">’முதல்வர் விஜய் சொன்ன மாற்றம் ஒன்றுமே வேளாண் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை என குறிப்பிட்டு தொடங்கிய எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், முதல்வர் அன்று ஒரு கருத்தை சொன்னார், பேப்பர் படிச்சா தெரியும் இன்று. அதில் எங்களுக்கு வருத்தம். இது பேசிய இயக்கம், கொள்கையை பேசி, பேசி ஆட்சியை பிடித்தவர்கள், மக்களின் மனதை தொட்டவர்கள்.</p>
<p style="text-align: justify;">முதல்வராக கலைஞர் இருந்தபோதும், மு.க.<a title="ஸ்டாலின்" href="https://tamil.abplive.com/topic/mk-stalin" data-type="interlinkingkeywords">ஸ்டாலின்</a> இருந்தபோது மந்திரிகளாக இருந்த எங்களுக்கு ஒரு பரபரப்பு, ஒரு பதற்றம் இருக்கும். காலையிலேயே ஐந்து மணி, ஆறுமணி, ஏழு மணிக்கெல்லாம் முதல்வராக கலைஞர், மு.க.ஸ்டாலினிடம் போன் வரும். எட்டு மணியை தாண்டினால்தான் எங்களுக்கெல்லாம் நிம்மதி பிறக்கும். செய்தித்தாள்களை காலையிலேயே பார்த்துவிட்டு, தொலைக்காட்சியில் செய்திகளை பார்த்துவிட்டு, அந்தந்த துறைகளின் அதிகாரிகள், அமைச்சர்களுக்கு போன் செய்வார்கள். ஆட்சியர்களுக்கும் போன் செல்லும். இந்த இடத்தில் இந்த பிரச்னை இருக்கிறது என பேப்பரில் செய்தியில் வந்திருக்கிறது. இதை நீங்கள் பார்க்கவில்லையா? என்று கேட்பார்கள். நாங்கள் அந்த ஐந்து ஆண்டுகளும் டென்ஷனாகவே இருப்போம். டென்ஷனாகவே வைத்திருப்பார்கள். ஆனால், இன்று அமைச்சர்களாக இருப்பவர்களும், அதிகாரிகளும் ரொம்ப ரிலாக்‌ஷாக இருக்கீங்க. அத பாத்தாதா எங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது என்று பேசிக்கொண்டிருக்கும்போது நீர்வளத்துறை அமைச்ச புஸ்ஸி ஆனந்த குறுக்கிட்டு பேசினார்.</p>
<p style="text-align: justify;"><strong><em>புஸ்ஸி ஆனந்த் குறுக்கீடு</em></strong></p>
<p style="text-align: justify;">எங்களுக்கும் போன் வருது. நேற்று நைட்டும், இன்று காலையிலும் கூட முதல்வர் விஜய் எங்களுக்கு போன் செய்து ஒவ்வொரு விஷயமும் கேட்கிறார். ஒரு வாய்க்கால் வெட்டும் விவகாரமாக இருந்தாலும் கூட அவர் நேரடியாக அழைத்து அந்த பிரச்னை குறித்து கேட்கிறார். உங்களுக்கு அந்த அஞ்சு வருஷம்தான் டென்ஷனு. நாங்க தினந்தோறும் டென்ஷனாக இருக்கிறோம். ஒரு சின்ன விஷயமாக இருந்தாலும் எங்களுக்கு அப்படி ஒரு பயம் இருக்கிறது என்று பேசினார்.</p>
<p style="text-align: justify;">இதனை கவனித்த முதல்வர் <a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/tvk-vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a> சிரித்தப்படியே இருவருக்கும் இடையேயான விவாதத்தை ரசித்து கேட்டுக்கொண்டிருந்தார்.</p>
<p style="text-align: justify;"> </p>
<p style="text-align: justify;"> </p>
Source: Read Full Article