
<p><strong>CM Vijay On By Election</strong>: திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை நடத்த அனுமதி அளிக்கக் கோரி, தேர்தல் முடிவுகள் தொடர்பான வழக்கில் முதலமைச்சர் விஜய் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். </p>
<h2><strong>இடைத்தேர்தலுக்கான தடையை நீக்க வேண்டும் - CM விஜய்</strong></h2>
<p>திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என, சென்னை உயர்நீதிமன்றத்தில் முதலமைச்சர் விஜய் கோரிக்கை விடுத்துள்ளார். தேர்தல் முடிவுகள் தொடர்பான வழக்கில் முதலமைச்சர் விஜய் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், “இடைத்தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் அந்த தொகுதிகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் சட்டமன்ற பிரதிநிதிகள் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். திருச்சி கிழக்கு தொகுதியில் 20 பேர் போட்டியிட்ட நிலையில், தேர்தல் வழக்கை தாக்கல் செய்தவரை வெற்றி பெற்றவராக அறிவிக்க வாய்ப்பில்லை. மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி 6 மாதங்களுக்குள் தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் அறிவிக்க வேண்டும். ஆனால் நிலுவையில் உள்ள தேர்தல் வழக்குகளால் திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தடை உள்ளது. எனவே பாளையங்கோட்டையைச் சேர்ந்த வெங்கடாஜலபதி தாக்கல் செய்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்” என முதலமைச்சர் <a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/tvk-vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a> பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.</p>
<p> </p>
Source: Read Full Article