செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் 38 கிராமங்களுக்கு புது விதிமுறை - முழு விவரம் உள்ளே!

செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் 38 கிராமங்களுக்கு புது விதிமுறை - முழு விவரம் உள்ளே!
News Image
<p style="text-align: justify;"><strong>Ramsar Site Tamil Nadu:</strong> செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற வேடந்தாங்கல் மற்றும் கரிக்கிலி பறவைகள் சரணாலயங்களுக்கு மத்திய அரசு எல்லை வரையறை செய்து &lsquo;ராம்சார்&rsquo; அங்கீகாரக் குறியீட்டை வழங்கியுள்ளது. இதன் தொடர்ச்சியாக, இந்தச் சரணாலயங்களைச் சுற்றி வான் வழியாக 5 கிலோமீட்டர் சுற்றளவில் அமைந்துள்ள கிராமங்களின் எல்லைப் பட்டியலை வனத்துறை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. 1936-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு 16 அடி நீர்ப்பிடிப்பு கொண்ட வேடந்தாங்கல் ஏரியும், 1989-ஆம் ஆண்டு வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சரணாலயமாக அறிவிக்கப்பட்ட கரிக்கிலி ஏரியும் தமிழகத்தின் முக்கியமான பாதுகாக்கப்பட்ட ஈரநிலப் பகுதிகளாகத் திகழ்கின்றன.</p> <h3 style="text-align: justify;">பறவைகளின் வருகையும் சூழலியலும்</h3> <p style="text-align: justify;">பர்மா, பங்களாதேஷ், ஸ்ரீலங்கா, பாகிஸ்தான் மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பாம்பாட்டி தாரா, சாம்பல் நாரை, நீர்க்காகம், கூழைக்கடா உட்பட 30-க்கும் மேற்பட்ட வகைகளைச் சேர்ந்த 40 ஆயிரத்திற்கும் அதிகமான பறவைகள் ஆண்டுதோறும் இங்கு வந்து தங்குகின்றன. வழக்கமாக செப்டம்பர் மாத இறுதியில் வெளிநாட்டுப் பறவைகளின் வருகை தொடங்கி, டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் உச்சத்தை அடைகிறது. மே மாதத்திற்குப் பிறகு பறவைகளின் எண்ணிக்கை குறையத் தொடங்கும். கரிக்கிலி ஏரியில் நீர்க்கடம்ப மரங்கள் அதிகம் இருப்பதால், இங்குப் பறவைகளின் வருகை மேலும் அதிகரித்துள்ளது.</p> <h3 style="text-align: justify;">கட்டுப்பாடுகளும் வளர்ச்சி திட்டங்களும்</h3> <p style="text-align: justify;">சரணாலயத்தின் வான்வழி 5 கி.மீ. சுற்றளவில் உள்ள பாதுகாக்கப்பட்ட கிராமங்களில் புதிய கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வனத்துறையின் அனுமதி பெற்ற பின்னரே கட்டுமான பணிகளையோ, வீடுகளுக்கான மனைப் பிரிவுகள் வாங்குவதையோ பொதுமக்கள் செய்ய வேண்டும். மேலும், அப்பகுதியில் உள்ள ஏரிகள் மற்றும் நீர்நிலைகளை வனத்துறையின் அனுமதியின்றி தூர்வாரக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p> <p style="text-align: justify;">இச்சரணாலயங்களை மேம்படுத்திச் சுற்றுலாவை ஊக்குவிப்பதன் மூலம் உள்ளூர் மக்களுக்கு உணவகங்கள் மற்றும் சிறு கடைகள் வழியாக வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது. அத்துடன் பெண்கள் மேம்பாட்டிற்கு வங்கி கடன் உதவிகளும் வழங்கப்பட உள்ளன. அதேவேளையில், கரிக்கிலி பகுதியில் தொழிற்சாலைகள் இல்லாததால் பொருளாதார ரீதியாகப் பின்தங்கியுள்ள மக்களுக்குக் குடிநீர், வடிகால் போன்ற அடிப்படை வசதிகளை வனத்துறையின் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டு அரசு அமைத்துத் தர வேண்டும் என்பதே உள்ளூர் மக்களின் முதன்மையான கோரிக்கையாக உள்ளது.</p>

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks