“மாநில அந்தஸ்து பெற இதுவே சரியான தருணம்!” - புதுச்சேரி சட்டசபையில் ரங்கசாமி அதிரடி பேச்சு

“மாநில அந்தஸ்து பெற இதுவே சரியான தருணம்!” - புதுச்சேரி சட்டசபையில் ரங்கசாமி அதிரடி பேச்சு
News Image
<p>புதுச்சேரி: புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற இதுவே சரியான தருணம் என்றும், இதற்காக மத்திய அரசிடம் தொடர்ந்து அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் சட்டசபையில் முதல்வர் ரங்கசாமி வலியுறுத்தி பேசினார்.</p> <p>புதுச்சேரி சட்டசபையில் கவர்னர் உரை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் பேசிய எம்.எல்.ஏ.க்கள், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து இல்லாததால் ஏற்படும் நிர்வாக சிக்கல்கள் குறித்தும், அதிகாரிகளின் ஒத்துழைப்பு போதுமானதாக இல்லை என்றும் குற்றம் சாட்டினர். மேலும், பல்வேறு அரசு திட்டங்களுக்கான கோப்புகள் நீண்ட காலமாக நிலுவையில் இருப்பதால் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்படுவதாகவும் தெரிவித்தனர்.</p> <p>இதற்கு பதிலளித்து முதல்வர் ரங்கசாமி பேசியதாவது:</p> <h2>மாநில அந்தஸ்து பெற இதுவே சரியான தருணம்</h2> <p>புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இதுதொடர்பாக சட்டசபையில் பலமுறை தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் மாநில அந்தஸ்து பெறுவதில் சில மாற்றுக் கருத்துகள் இருந்தன. ஆனால், தற்போது அந்த நிலை இல்லை.</p> <p>புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து இல்லாததால் நிர்வாக ரீதியாக பல்வேறு தடைகள் ஏற்படுகின்றன. இந்த பிரச்சினைகளை எம்.எல்.ஏ.க்கள் மட்டுமல்லாமல் அரசு ஊழியர்களும், பொதுமக்களும் நன்கு அறிந்துள்ளனர். எனவே, புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறுவதற்கு இதுவே சரியான தருணம்.</p> <p>மாநில அந்தஸ்து வேண்டும் என்று வலியுறுத்தி பல பிரதமர்களை நேரில் சந்தித்து பேசியுள்ளேன். ஒவ்வொரு முறையும் மாநில அந்தஸ்து குறித்து கேட்டபோது, &lsquo;பார்ப்போம்&rsquo; என்று பிரதமர்கள் தெரிவித்தனர்.</p> <p>பிரதமர் மோடி புதுச்சேரிக்கு வந்தபோதும், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று நேரடியாக வலியுறுத்தினேன். புதுச்சேரி பல்வேறு துறைகளில் சிறப்பாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இருந்தாலும், மாநில அந்தஸ்து இல்லாதது மனதில் ஒரு குறையாகவே உள்ளது.</p> <p>எனவே, தேவையான நேரங்களில் மீண்டும் மாநில அந்தஸ்து தொடர்பாக மத்திய அரசிடம் வலியுறுத்துவேன். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அதற்காக நாம் மேலும் அழுத்தம் கொடுக்க வேண்டும்.</p> <h2>எம்.பி.க்களும் குரல் கொடுக்க வேண்டும்</h2> <p>புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கக் கோரி பாராளுமன்றம் முன்பு நேரு எம்.எல்.ஏ. போராட்டம் நடத்தினார். அவரது போராட்டத்தை பாராட்டுகிறேன். பாராளுமன்றத்தில் தி.மு.க. எம்.பி. சிவாவும் புதுச்சேரிக்கான மாநில அந்தஸ்து குறித்து குரல் கொடுத்துள்ளார்.</p> <p>புதுச்சேரியைச் சேர்ந்த எம்.பி.க்களும் பாராளுமன்றத்தில் தொடர்ந்து மாநில அந்தஸ்து கோரிக்கையை வலியுறுத்த வேண்டும். வாய்ப்பு கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மாநில அந்தஸ்து தொடர்பாக தொடர்ந்து குரல் கொடுப்போம். மாநில அந்தஸ்து இல்லாததால் முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு பல்வேறு சங்கடங்கள் ஏற்படுகின்றன. பல விஷயங்களுக்கும் கவர்னரை அணுக வேண்டிய நிலை உள்ளது.</p> <h2>அதிகார போட்டியால் கோப்புகள் தேக்கம்</h2> <p>கவர்னருக்கே அதிகாரம் உள்ளது என்று கடந்த ஆட்சிக் காலத்தில் உச்சநீதிமன்றம் வரை சென்று உறுதி செய்யப்பட்டுவிட்டது. இதன் காரணமாக அரசின் நிர்வாகத்தில் சில சங்கடங்கள் ஏற்படுகின்றன. அதிகார போட்டி காரணமாக பல்வேறு கோப்புகள் மத்திய அரசுக்கு அனுப்பப்படுகின்றன. அங்கு சென்ற கோப்புகள் மீண்டும் திரும்பி வருவதில் தாமதம் ஏற்படுவதால் பல திட்டங்களை நிறைவேற்ற முடியாத நிலை உருவாகிறது. இதுபோன்ற சூழ்நிலையை மாற்றும் வகையில் தற்போது பல கோப்புகளை மத்திய அரசுக்கு அனுப்பாமல், அரசின் அதிகார வரம்புக்குள் நாங்களே முடிவுகளை எடுத்து செயல்படுத்தி வருகிறோம்.</p> <h2>&lsquo;கேள்வி மேல் கேள்வி கேட்க வேண்டாம்&rsquo;</h2> <p>அரசு நிர்வாகத்தில் கோப்புகள் தேங்கி, பல திட்டங்கள் நிலுவையில் கிடக்கின்றன. இதில் மாற்றம் தேவை. ஒரு கோப்பில் காலதாமதம் ஏற்பட்டால் அதன் பாதிப்பு இறுதியில் மக்களுக்கான நலத்திட்டங்களில்தான் ஏற்படும். எனவே, அதிகாரிகள் கோப்புகள் மீது கேள்வி மேல் கேள்வி எழுப்பிக் கொண்டிருக்காமல், விதிமுறைகளுக்கு உட்பட்டு தேவையான அனுமதிகளை வழங்க முன்வர வேண்டும். நிர்வாகத்தில் தேவையற்ற காலதாமதம் இருக்கக்கூடாது. மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு அதிகாரிகள் விரைந்து செயல்பட வேண்டும்.</p> <h2>1,000 அரசு பணியிடங்கள் நிரப்பப்படும்</h2> <p>நிர்வாக ரீதியாக பல்வேறு சிக்கல்கள் இருந்தாலும், புதுச்சேரி அரசு பணியிடங்களை நிரப்புவதில் உறுதியாக உள்ளது. கடந்த ஆட்சிக் காலத்தில் சுமார் 4,100 அரசு பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இந்த ஆண்டில் புதிதாக 1,000 அரசு பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.</p> <p>மேலும், புதுச்சேரி காவல்துறைக்கு ஜனாதிபதியின் வண்ணக்கொடி விருது கிடைத்துள்ளது. இந்த பெருமையை பெற்றுள்ள புதுச்சேரி காவல்துறையினருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். காவல்துறையில் புதிதாக ஐ.ஆர்.பி.என். (IRBN) படைப்பிரிவு வர உள்ளது. இதன் மூலம் காவல்துறையில் மேலும் 1,000 பணியிடங்கள் உருவாகி நிரப்பப்பட உள்ளன. புதுச்சேரியின் வளர்ச்சிக்கு மாநில அந்தஸ்து அவசியம். இதற்காக தொடர்ந்து மத்திய அரசிடம் வலியுறுத்தி, தேவையான அழுத்தத்தையும் கொடுத்து, புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு முதல்வர் ரங்கசாமி பேசினார்.</p>

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks