Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?

Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
News Image
<p>நாடு முழுவதும் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி &nbsp;சுதந்திர தின விழா கோலாலகமாக கொண்டாடப்பட உள்ளது. தமிழ்நாட்டிலும் சுதந்திர தின விழா கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.&nbsp;</p> <p>சென்னையில் கோட்டையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் <a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/tvk-vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a> கொடியேற்ற உள்ளார். இதற்காக காவல்துறையினரின் கம்பீரமான அணிவகுப்பு நடைபெற உள்ளது. காவல்துறையினரின் அணிவகுப்பிற்காக ஒத்திகை நடைபெற உள்ளது.</p> <h2><strong>போக்குவரத்து மாற்றம்:</strong></h2> <p>நிகழ்ச்சி ஒத்திகைக்காக ஆகஸ்ட் 7, 11 மற்றும் 13 ஆகிய நாட்களில் ஒத்திகை நடைபெற உள்ளது. இதற்காக, சென்னையில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.</p> <p>1. உழைப்பாளர் சிலை முதல் போர் நினைவுச்சின்னம் வரையிலான காமராஜர் சாலை, போர் நினைவுச் சின்னத்தில் இருந்து இந்திய ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வடக்குப்பகுதி வரையிலான ராஜாஜி சாலைகளில் அனுமதி அட்டை பெற்றிருப்போர் தவிர, மற்ற வாகனங்களுக்கு அனுமதியில்லை.</p> <p>2. காமராஜர் சாலை - ராஜாஜி சாலை வழியாக பாரிமுனை நோக்கி செல்லும் வாகனங்கள் உழைப்பாளர் சிலையில் இருந்து வாலாஜா சாலை - அண்ணாசாலை - முத்துசாமி பாலம் - முத்துசாமி சாலை வழியாக பாரிமுனை செல்லலாம்.</p> <p>3. பாரிமுனையில் இருந்து தலைமைச் செயலகம் வழியாக காமராஜர் சாலை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் வடக்கு கோட்டை பக்க சாலை - ராஜா <a title="அண்ணாமலை" href="https://tamil.abplive.com/topic/annamalai" data-type="interlinkingkeywords">அண்ணாமலை</a> மன்றம் சந்திப்பு - முத்துசாமி சாலை - முத்துசாமி பாலம் - அண்ணாசாலை - வாலாஜா சாலை வழியில் காமராஜர் சாலை செல்லலாம்.</p> <p>4. சிவப்பு மற்றும் ஊதா நிற வண்ண வாகன அனுமதி அட்டை வைத்திருப்போர், காலை 8.30 மணி வரை ராஜாஜி சாலை வழியாக சென்று தலைமைச் செயலக உள்வாயிலின் அருகே இறங்கி, வாகனத்தை கோட்டை வளாகத்தில் நிறுத்த வேண்டும்.</p> <p>5. இந்த வண்ண வாகன அனுமதி அட்டை வைத்திருப்போர்கள் 8.30 மணிக்கு பிறகு வந்தால் போர் நினைவுச் சின்னம் - கொடி மரச்சாலை - முத்துசாமி பாலம் - வடக்கு கோட்டை பக்கச்சாலை - ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வழியாக தலைமைச் செயலக வெளிவாயிலின் அருகே இறங்கி பொதுப்பணித்துறை வாகன நிறுத்தத்தில் வாகனங்களை நிறுத்த வேண்டும்.</p> <p>6. நீல மற்றும் இளஞ்சிவப்பு நிற வாகன அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள் காலை 8.30 மணி வரை ராஜாஜி சாலை - போர் நினைவுச்சின்னம் கொடிமரச்சாலை - முத்துசாமி சாலை - வடக்கு கோட்டை பக்க சாலை - ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வழியாக தலைமைச் செயலக வெளிவாயிலின் அருகே இறங்கிக் கொள்ள வேண்டும். பொதுப்பணித்துறை அலுவலக வாகன நிறுத்தத்தில் வாகனத்தை நிறுத்த வேண்டும்.</p> <p>7. நீல, இளஞ்சிவப்பு வாகன அட்டை வைத்திருப்பவர்கள் காலை 8.30 மணிக்கு பிறகு வந்தால் காமராஜர் சாலை - வாலாஜா சாலை - முத்துசாமி பாலம் - வடக்கு கோட்டை பக்க சாலை - ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வழியாக தலைமைச் செயலக வெளிவாயிலின் அருகே இறங்கிக் கொள்ள வேண்டும். வாகனத்தை பொதுப்பணித்துறை வாகன நிறுத்தத்தில் விட வேண்டும்.</p> <p>8. அனுமதி அட்டை இல்லாத வாகனங்களில் வருபவர்கள் போர் நினைவுச் சின்னம் அருகில் இறங்கி, தீவுத்திடல் உள்ளே வாகனங்களை நிறுத்த வேண்டும்.</p> <p>இந்த போக்குவரத்து கட்டுப்பாடுகள் ஒத்திகை நடைபெறும் 3 நாட்களிலும் காலை 6 மணி முதல் ஒத்திகை முடியும் வரை இருக்கும்.</p> <p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/health/shouldn-t-we-eat-these-things-with-tea-270270" width="631" height="381" scrolling="no"></iframe></p>

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks