’காவிரி விவகாரத்தில் முதல்வர் விஜயின் நிலைபாடு என்ன?’ பாஜக துணைத் தலைவர் சரமாரி கேள்வி..!

’காவிரி விவகாரத்தில் முதல்வர் விஜயின் நிலைபாடு என்ன?’ பாஜக துணைத் தலைவர் சரமாரி கேள்வி..!
News Image
<p style="text-align: justify;">காவிரி நீர் விவகாரம் தொடர்பாக தமிழக அரசின் செயல்பாடுகளை கேள்விக்குள்ளாக்கி, தமிழக முதல்வர் விஜய் உடனடியாக தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும் என்று தமிழக பாஜக மாநில துணைத் தலைவர் வினோஜ் பி. செல்வம் வலியுறுத்தியுள்ளார்.</p> <p style="text-align: justify;">&nbsp;</p> <p style="text-align: justify;"><strong><em>முதல்வர் விஜய் மீது சரமாரி தாக்கு</em></strong></p> <p style="text-align: justify;">பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர், காவிரி நீர் பிரச்சினை தற்போது தமிழகத்தின் மிக முக்கியமான விவகாரமாக உள்ளதாகக் குறிப்பிட்டார். கர்நாடகாவில் அனைத்து கட்சிகளும் ஒன்றுகூடி தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறந்துவிடுவது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக சுட்டிக்காட்டிய அவர், தமிழகத்தில் இதுவரை இதுகுறித்து முதல்வர் விஜய் மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன என்று கேள்வி எழுப்பினார்.</p> <p style="text-align: justify;">மேலும், காவிரி விவகாரத்தில் தமிழக அரசின் தரப்பில் உறுதியான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்றும், கர்நாடக அரசிடம் தமிழகத்தின் உரிமையை வலியுறுத்தும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.</p> <p style="text-align: justify;"><strong><em>காவிரி விவகாரத்தை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும்</em></strong></p> <p style="text-align: justify;">தமிழக அரசின் செயல்பாடுகளை விமர்சித்த வினோஜ் பி. செல்வம், அரசியல் பொறுப்பில் இருக்கும் நிலையில் முதல்வர் விஜய் காவிரி விவகாரத்தை தீவிரமாக எடுத்துக்கொண்டு செயல்பட வேண்டும் என்றார். காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளின்படி தமிழ்நாட்டுக்கு உரிய நீர் திறந்துவிடப்படுவதை உறுதி செய்வதற்கும், மேட்டூர் அணைக்கு வரும் நீர் விவசாயிகளுக்கு முறையாக சென்றடைவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.</p> <p style="text-align: justify;">அதேபோல், இந்த விவகாரம் குறித்து முதல்வர் <a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/tvk-vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a> தனது நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்றும், ஊடகங்களும் இந்த விவகாரத்தில் அரசின் பதிலை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.</p> <p style="text-align: justify;">வினோஜ் பி. செல்வத்தின் இந்தக் கருத்துகள், ஏற்கனவே அரசியல் ரீதியாக பரபரப்பை ஏற்படுத்தியுள்ள காவிரி நீர் விவகாரத்தில் மேலும் கவனத்தை ஈர்த்துள்ளன</p>

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks