
<p>ஓணம் பண்டிகையை முன்னிட்டு மதுரையில் உள்ள மலையாள மக்கள் தங்களது வீடுகளில் அத்தப்பூ கோலமிட்டு புத்தாடை அணிந்து திருவாதிரை களி நடனமாடி உற்சாக கொண்டாட்டம்.</p>
<div dir="auto">5<strong>0 கிலோ வண்ண வண்ண பூக்களால் அத்தப்பூ கோலம்போட்டு கொண்டாடினர். </strong></div>
<div dir="auto"> </div>
<div dir="auto">மதுரை கலைநகர் பகுதியில் 50 கிலோ வண்ண வண்ண பூக்களால் அத்தப்பூ கோலம்போட்டு கொண்டாடினர். ஆவணி அஸ்தம் நட்சத்திர நாளான இன்று நாடு முழுவதிலும் வாழும் மலையாள மக்கள் ஓணம் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடிவருகின்றனர்</div>
<div dir="auto"> </div>
<div dir="auto">
<div dir="auto"><strong>வீடுகளில் தோரணம் கட்டி திருவாதிரை களி நடனமாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். </strong></div>
<div dir="auto"> </div>
</div>
<div dir="auto">மதுரை கலைநகர் 4ஆவது தெரு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு மகாபலி ராஜாவை பூவுலகுக்கு வரவேற்கும் விதமாக சம்மங்கி, செவ்வந்தி, ரோஜா, மல்லிகை பூ உள்ளிட்ட 50 கிலோ பூக்களால் அத்தப்பூ கோலமிட்டு ஓணம் பண்டிகை பாடல்களை பாடி கை கூப்பி வணங்கி வரவேற்றனர். ஓணம் பண்டிகையை முன்னிட்டு மலையாள மக்கள் தங்களது வீடுகளில் தோரணம் கட்டி திருவாதிரை களி நடனமாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். </div>
<div dir="auto"> </div>
<div dir="auto"><strong>குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை புத்தாடை அணிந்து உற்சாகமாக கொண்டாடினர்.</strong></div>
<div dir="auto"> </div>
<div dir="auto">இதனை தொடர்ந்து ஓணம் பண்டிகைக்காக போடப்பட்ட அத்தப்பூ கோலத்தினை அண்டை வீட்டில் உள்ளவர்கள் ஆர்வமுடன் பார்த்து ரசித்து ஓணம் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதனையடுத்து நடந்தப்பட்ட ஓணம் விருந்திற்கு வரவேற்கும் விதமாக நண்பர்களையும் , அண்டை வீட்டார்களையும் பருப்பு பாயாசம் கொடுத்து அழைத்தனர். ஓணம் பண்டிகையை முன்னிட்டு மலையாள மக்கள் ஓவ்வொருவரும் குடும்பம் குடும்பமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை புத்தாடை அணிந்து உற்சாகமாக கொண்டாடினர்.</div>
Source: Read Full Article