
<p> நேபாளம் நாட்டில் உள்ள கோஷி நதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் ஒட்டுமொத்த நேபாளமும் நிலைகுலைந்து போகியுள்ளது. திடீரென ஏற்பட்ட இந்த காட்டாற்று வெள்ளத்தால் ஏராளமான கட்டிடங்களும், பாலங்களும் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. </p>
<h2><strong>நேபாள காட்டாற்று வெள்ளம்:</strong></h2>
<p>இதில் சுமார் 400க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். இதுவரை 95 நபர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. இந்த துயரச்சம்பவத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சிலரும் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. </p>
<p>இந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்காக தமிழ்நாடு அரசு சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, தமிழ்நாடு முதலமைச்சர் <a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/tvk-vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a>யின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, </p>
<h2><strong>தமிழர்களை மீட்க உத்தரவு:</strong></h2>
<p>நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் தமிழர்கள் உள்பட இந்தியர்கள் பலர் காணாமல் போனதாக வரும் செய்திகள் அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். </p>
<blockquote class="twitter-tweet">
<p dir="ltr" lang="ta">நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் தமிழர்கள் உள்பட இந்தியர்கள் பலர் காணாமல் போனதாக வரும் செய்திகள் அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். <br /><br />இந்த பேரிடரில் காணாமல் போன தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை விரைந்து மீட்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உதவிகளை… <a href="https://t.co/nriz60tZKy">pic.twitter.com/nriz60tZKy</a></p>
— CMOTamilNadu (@CMOTamilnadu) <a href="https://x.com/CMOTamilnadu/status/2092609050538385847?ref_src=twsrc%5Etfw">August 26, 2026</a></blockquote>
<p>
<script src="https://platform.x.com/widgets.js" async="" charset="utf-8"></script>
</p>
<p>இந்த பேரிடரில் காணாமல் போன தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை விரைந்து மீட்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கவும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு புதுதில்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல அரசு உயர் அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன்.</p>
<h2><strong>அவசர தொலைபேசி எண்கள்:</strong></h2>
<p>நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களுக்கு உதவி தேவைப்படும் நிலையில் அவர்களோ அல்லது தமிழ்நாட்டில் உள்ள அவர்களது உறவினர்களோ தொடர்பு கொள்ள ஏதுவாக அவசர தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.</p>
<p>மேலும், இந்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் நேபாளத்தில் உள்ள இந்தியத் தூதரகம் ஆகியவற்றின் வாயிலாக, தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் குறித்த தகவல்களைப் பெற்று, அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யத் தேவையான நடவடிக்கைகள் விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.</p>
<p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.</p>
<p>நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்கள் அல்லது தமிழ்நாட்டில் உள்ள அவர்களது குடும்பத்தினர் உதவிக்கு உடனடியாக தொடர்பு கொள்ள </p>
<p>இந்தியாவிற்குள் 1800 309 3793 (கட்டணமில்லா அழைப்பு)</p>
<p>வெளிநாடு - 918069009900 ( மிஸ்ட் கால்)</p>
<p>தொடர்புக்கு - 8069009901 </p>
<p>தமிழ்நாடு இல்லம், புதுடெல்லி ( கட்டுப்பாட்டு அறை) - 9289516712</p>
<p>இந்த எண்கள் அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/lifestyle/how-much-will-you-get-in-return-if-you-deposit-5-lakhs-in-post-office-272536" width="631" height="381" scrolling="no"></iframe></p>
Source: Read Full Article