
<p>திமுகவுக்கு ஓட்டு போடவில்லை என்றால் நாம் கொடுத்த பொருட்களை ஏன் வாங்குகிறீர்கள் என மக்களை முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கடிந்து கொண்டுள்ளார். </p>
<h2><strong>தோல்வியை தாங்க முடியாத திமுக</strong></h2>
<p>2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியைப் பிடித்து அரியணையில் ஏற முதலமைச்சராக ஜோசப் விஜய் பதவியேற்றார். இந்த தேர்தலில் ஆளும் கட்சியாக இருந்த திமுக எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றது. முதல்முறையாக போட்டியிட்ட தவெக 50 ஆண்டுகாலத்துக்கும் மேலான அனுபவம் பெற்ற அதிமுக, திமுகவை ஓரம் தள்ளிய சம்பவம் அரசியலில் புதிய வரலாறை படைத்துள்ளது. தவெக வெற்றி பெற்றதை திமுகவினரால் இன்றளவும் ஏற்க முடியவில்லை. இதனால் பூத் வாரியாக தாங்கள் பெற்ற வாக்குகள், தோற்ற காரணம் குறித்து ஆய்வு செய்து வருகிறார்கள். </p>
<p><iframe title="Senthil balaji | "சொடக்கு போட்டு பேசுனீங்க! இப்படி நடுரோட்ல விட்டீங்களே” வச்சுசெய்த <a title=" data-type="interlinkingkeywords"><a title="செந்தில் பாலாஜி" href="https://tamil.abplive.com/topic/senthil-balaji" data-type="interlinkingkeywords">செந்தில் பாலாஜி</a>" src="https://www.youtube.com/embed/HRcdWhyxXp8" width="1022" height="575" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p>
<h2>விஜயை வெளுத்து வாங்கிய அனிதா ராதாகிருஷ்ணன்</h2>
<p>தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகேயுள்ள தென் திருப்பேரை பகுதியில் பேரூர் கழக நிர்வாகிகள், வார்டு மற்றும் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அ அதில் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், முதலமைச்சர் விஜய் தினந்தோறும் எதையாவது ஒன்றை ஆய்வு செய்வது போல செல்கிறார். அது ஆய்வு கிடையாது சினிமா ஷூட்டிங் நடக்கிறது. ரீல்ஸ் வீடியோக்கள் தான் விட்டுக் கொண்டிருக்கிறார். ஆகஸ்ட் 5ம் தேதி சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது. அப்போது ஒரு கேள்விக்கும் பதில் கொடுக்க முடியாதவராக இன்றைய முதலமைச்சர் ஜோசப் விஜய் இருப்பார். சினிமாவில் விஜய், தேர்தலுக்கு வந்தால் ஜோசப் விஜய் என வைத்துக் கொள்வார். </p>
<p><strong>Also Read: <a title="யார் துரோகி?.. நம்பிக்கையை விற்ற நச்சுப்பாம்புகள்.. காங்கிரஸை சாடிய தயாநிதி மாறன்!" href="https://tamil.abplive.com/news/tamil-nadu/dayanidhi-maran-mp-criticized-congress-over-on-rahul-gandhi-comments-about-traitors-269823" target="_blank" rel="noopener">யார் துரோகி?.. நம்பிக்கையை விற்ற நச்சுப்பாம்புகள்.. காங்கிரஸை சாடிய தயாநிதி மாறன்!</a></strong></p>
<p>தேர்தலுக்கு முன்பு திருச்சிக்கு சென்று தேவாலயத்தில் முட்டி போட்டு பிரார்த்தனை செய்வார். தேர்தல் முடிந்து விட்டால் திருச்செந்தூருக்கு வருகை தந்து வேலை தூக்கிட்டு நிற்பார். இவர் எம்ஜிஆர் போல இருக்க வேண்டும் என சொல்லி கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு சென்றார். எம்ஜிஆர் ஏழைகளை நேசித்த மாமன்னன், அவருடன் போட்டிப் போடுகிறார். நடிகராக இருக்கும்போது எல்லாம் இதெல்லாம் உங்களுக்கு கண்ணு தெரியவில்லையா?.. எந்த வகையிலாவது நடித்து எல்லாரையும் ஏமாற்றி ஓட்டு வாங்குவதில் தான் குறியாக இருக்க வேண்டும் என இன்றைக்கு தமிழக முதலமைச்சர் <a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/tvk-vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a> செயல்படுகிறார் என விமர்சனத்தை முன்வைத்தார். </p>
<h2><strong>நமக்கு ஏன் ஓட்டு விழல?</strong></h2>
<p>இதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் பூத் வாரியாக போடப்பட்ட வாக்குகளை ஆய்வு செய்த அனிதா ராதாகிருஷ்ணன், “நமக்கு விழாத ஓட்டுகளை பாஜக - அதிமுக கூட்டணி வாங்கியிருந்தாலும் பரவாயில்லை. ஆனால் <a title="தவெக" href="https://tamil.abplive.com/topic/tvk" data-type="interlinkingkeywords">தவெக</a>வுக்கு 168 வாக்குகள் விழுந்திருக்கிறது. நமக்கு 138 தான் கிடைத்திருக்கிறது. இது என்ன காரணமாக இருக்கும் என பொறுப்பாளர் பதிலளிக்க வேண்டும். </p>
<p>எல்லாருக்கும் எல்லாம் பண்ணியிருக்கோம். கட்சியில் வலுவான ஆட்கள் இருந்து ஏன் நமக்கு ஓட்டு விழவில்லை. நமக்கு ஓட்டு போடாதவர்கள் நாம் கொடுப்பதை வாங்கக்கூடாது என கறாராக சொன்னார். உள்ளாட்சி தேர்தலில் இதுபோன்று நடக்காது என அனிதா ராதாகிருஷ்ணனை நிர்வாகிகள் சமாதானம் செய்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.</p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/auto/10-things-you-should-not-do-with-a-cng-car-269800" width="631" height="381" scrolling="no"></iframe></p>
Source: Read Full Article