
<p>மக்களிடம் வாங்கும் திரள்நிதியில் டீ கூட வாங்கி குடித்ததில்லை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். </p>
<p>சென்னை பல்லாவரத்தில் நாம் தமிழர் கட்சியில் பல்வேறு கட்சியைச் சேர்ந்தவர்கள் இணையும் விழா மிக பிரமாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேசிய சீமான், என்றைக்கு நான் தமிழன், என் தாய் மொழி தமிழ் என திமிறி எழுகிறாயோ அன்றைக்கு தான் விடுதலை கிடைக்கும். தமிழையே உச்சரிக்காதவன்கிட்ட நாட்டை கொடுத்து விட்டு நடுரோட்டில் நிறுத்தி விட்டார்கள். நடிகனுக்கும், தலைவனுக்கு வித்தியாசம் தெரியாத தறுதலைக் கூட்டம் இப்படி செய்துள்ளது. எங்களைப் பற்றி அவதூறு அல்லது பொய்யை கட்டமைக்கிறார்கள். </p>
<p>திரள்நிதி திருடர்கள் என சொல்கிறார்கள். இவ்வளவு நாள் சொன்னது திருட்டு நிதிக்காரன், இப்போது சொல்பவன் பிளாக் டிக்கெட்காரன். நான் பொய்யாக பேசுவேன் என சொல்கிறார்களே, நான் சொன்ன ஒரு பொய்யை சொல்லுங்கள் பார்க்கலாம். திரள்நிதி என்பது மக்களிடம் இருந்து பெற முடியும். இது மக்களுக்கான இயக்கம். உனக்கு விழுந்த ஓட்டுகளை நீயே குத்திக்கொண்டாயா?.. மக்களிடம் தானே கேட்டாய். நான் வாக்கு மட்டுமல்லாமல் வலிமையையும் கேட்கிறேன். இனமாகவும், பணமாகவும் மக்கள் தான் இருக்க வேண்டும். </p>
<p><iframe title="Senthil balaji | "சொடக்கு போட்டு பேசுனீங்க! இப்படி நடுரோட்ல விட்டீங்களே” வச்சுசெய்த <a title=" data-type="interlinkingkeywords"><a title="செந்தில் பாலாஜி" href="https://tamil.abplive.com/topic/senthil-balaji" data-type="interlinkingkeywords">செந்தில் பாலாஜி</a>" src="https://www.youtube.com/embed/HRcdWhyxXp8" width="1022" height="575" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p>
<p>திரள்நிதி வாங்கும் பணத்தில் ஒரு டீ கூட குடிக்க மாட்டோம். சீமான் பென்ஸ் கார் வாங்கிட்டாரு என சொல்கிறார்கள். உங்க அம்மா, பாட்டி தாலியை அறுத்தா கார் வாங்கினோம்?.. அடுத்து விமானம் தான் சொந்தமாக வாங்கி ஓட்டப் போகிறேன். என் மருமகன் ஒருநாள் வந்தபோது சொந்த பணத்தை செலவு செய்து எனக்கு அந்த காரை வாங்கி தந்தார் என சீமான் தெரிவித்தார். </p>
<p>தொடர்ந்து முதலமைச்சர் விஜய் பற்றி பேசிய சீமான், நடிக்கும்போது வராத ஜோசப், எப்படி அரசியலுக்கு வரும்போது மட்டும் வருகிறது. அறிமுகப் படத்திலேயே ஜோசப் விஜய் என போட்டுக் கொள்ள வேண்டியது தானே?.. தமிழ்நாட்டில் ஏன் இத்தனை தொகுதிகள் இருக்கும்போது பெரம்பூரிலும், திருச்சி கிழக்கிலும் ஏன் நின்றாய்?.. காரணம் பெரம்பூரில் மதமும், திருச்சியில் சாதி மற்றும் மதமும் இருப்பதால் தான். ஆனால் நீங்கள் சாதி, மதத்தை ஒழித்து விட்டதாக பேசுகிறீர்கள். உங்களை ஒழிக்காமல் எப்படி சாதி, மதத்தை ஒழிக்க முடியும்?.</p>
<p><strong>Also Read: <a title="திமுகவுக்கு ஓட்டு போட மாட்டீங்க.. பொருள் மட்டும் வேணுமா?.. மக்களை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன்!" href="https://tamil.abplive.com/news/tamil-nadu/anita-radhakrishnan-lashed-out-at-the-people-who-did-not-vote-for-the-dmk-269874" target="_blank" rel="noopener">திமுகவுக்கு ஓட்டு போட மாட்டீங்க.. பொருள் மட்டும் வேணுமா?.. மக்களை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன்!</a></strong></p>
<p>அதுமட்டுமல்லாமல் நான் முதலமைச்சரானால் என் வண்டியில் தான் வருவேன். நாம் தமிழர் கட்சி வாழ்க என்ற கோஷமெல்லாம் இருக்கக்கூடாது. இந்த புரோட்டாகால் எதுவும் எனக்கு கிடையாது. நான் தான் நாட்டுக்கே பாதுகாப்பு. எனக்கு எந்த பாதுகாப்பும் தேவையில்லை. அவர் (<a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/tvk-vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a>) வீட்டில் இருந்து கிளம்புவதற்கு 2 மணி நேரத்துக்கு நேரத்திற்கு முன்னால் ரோட்டில் நம்மை நிறுத்தி விடுகிறார்கள். ஒரு கயிறை குறுக்கே கட்டி விடுகிறார்கள். நான் நின்னுக்கிட்டே இருக்க வேண்டிய நிலைமை இருக்கிறது. இவர்களை எல்லாம் ஒழிக்க வேண்டும். ரொம்ப தொல்லையாக இருக்கிறது என அவர் ஆவேசமாக பேசினார். </p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/auto/10-things-you-should-not-do-with-a-cng-car-269800" width="631" height="381" scrolling="no"></iframe></p>
Source: Read Full Article