
<h2>திரிஷாவை விமர்சித்த ஆர்.பி உதயகுமார்</h2>
<p>தமிழகத்தில் <a title="தவெக" href="https://tamil.abplive.com/topic/tvk" data-type="interlinkingkeywords">தவெக</a> ஆட்சி அமைந்துள்ள நிலையில், முதலமைச்சர் விஜய்யின் தோழியான நடிகை திரிஷாவை விமர்சனம் செய்து தொடர்ந்து கருத்துகள் வெளியிடப்பட்டு வருகிறது. இந்த வகையில் காவிரி நீர் தொடர்பாக நடைபெற்ற போராட்டத்தில் எதிர்கட்சி தலைவர் உதயநிதி பேசிய சர்ச்சை கருத்து விமர்சனத்தை ஏற்படுத்திய நிலையில், உதயநிதி கைது செய்யப்பட்டார்.</p>
<p>இந்த பரபரப்பு அடங்குவதற்குள் தூத்துக்குடியில் நடைபெற்ற அதிமுக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நடிகை திரிஷா தொடர்பாக பேசியது கடும் எதிர்ப்பை உருவாக்கியுள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டில் காவிரி பற்றி பேசுவதே பிரச்னையாக உள்ளது. காவிரி தண்ணீருக்காக சண்டை போடுவார்கள் என பார்த்தால், ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் எங்கள் அண்ணி த்ரிஷாவிற்காக சண்டை போடுகிறார்கள்.</p>
<h2>”எங்க அண்ணணுக்கு தெரிந்தது எல்லாம் த்ரிஷா மட்டும் தான்”</h2>
<p>சட்டசபைக்கு வந்து (முதலமைச்சர் விஜய்) கலகலவென இருக்க வேண்டாமா? எத்தனை ஆண்டு காலம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்களுக்காக சேவை செய்து உழைத்து இருந்தாலும், எங்களுக்கு கிடைக்காத வாய்ப்பினை மக்கள் உங்களுக்கு கொடுத்து இருக்கிறார்கள். சந்தோஷமாக இருக்க வேண்டாமா? எதையோ பறிகொடுத்ததை போன்று உட்கார்ந்து இருக்கிறார் (முதலமைச்சர் <a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/tvk-vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a>).</p>
<p>அப்போது சுற்றி இருந்தவர்கள் மூனுஷா என கூற, எங்க அண்ணணுக்கு தெரிந்தது எல்லாம் த்ரிஷா மட்டும் தான்” என ஆர்.பி. உதயகுமார் சர்ச்சையில் பேசியிருந்தார். இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பை தெரிவித்து வரும் நிலையில், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு எதிராக திரிஷா நற்பணி மன்றம் சார்பாக கண்டன போஸ்டர்கள் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டுள்ளது. </p>
<h2> ஆர்.பி.உதயகுமாருக்கு எதிராக போஸ்டர்</h2>
<p>மதுரையின் பல்வேறு பகுதிகளில் திரிஷா நற்பணி மன்றத்தினர் சார்பில் ஒட்டப்பட்டுள்ள கண்டன போஸ்டர்கள் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. மேலும், நடிகை திரிஷாவுக்கு ஆதரவாகவும், ஆர்.பி. உதயகுமாரின் பேச்சுக்கு எதிராகவும் நற்பணி மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.</p>
<p>அந்த போஸ்டரில் எங்கள் அன்பு அக்கா திரிஷா பற்றி யார் தவறாக பேசினாலும் ஏற்க முடியாது. மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மதுரையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு எதிராக ஒட்டப்பட்டுள்ள கண்டன போஸ்டர்கள் அரசியல் மற்றும் திரையுலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.</p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/auto/a-jackpot-for-car-buyers-in-august-discounts-of-up-to-rs-3-5-lakh-on-which-cars-270720" width="631" height="381" scrolling="no"></iframe></p>
Source: Read Full Article