வீட்டில் இருந்தபடியே பத்திரப்பதிவு செய்வது எப்படி? 'ஸ்டார் 3.0' மூலம் தமிழக அரசு செய்த மாபெரும் புரட்சி!

வீட்டில் இருந்தபடியே பத்திரப்பதிவு செய்வது எப்படி? 'ஸ்டார் 3.0' மூலம் தமிழக அரசு செய்த மாபெரும் புரட்சி!
News Image
<p style="text-align: justify;"><span style="color: #ba372a;"><strong>Mandatory Online Registration in Tamil Nadu Starting August 17:</strong></span> தமிழகத்தில் பத்திரப்பதிவு பணிகளை எளிமையாக்கவும், வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும் 'ஸ்டார் 3.0' என்ற புதிய மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதன் மூலமாகப் புதிய திட்டங்களில் வீடு மற்றும் மனை விற்பனைக்கான பத்திரங்களை, பொதுமக்கள் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு நேரடியாகச் செல்லாமலேயே பதிவு செய்து கொள்ள முடியும். இது தொடர்பான முக்கிய வழிகாட்டுதல்களைப் பதிவுத்துறை தலைவர் அருண் சுந்தர் தயாளன், கட்டுமான நிறுவனங்களுக்குக் கடிதம் மூலம் அனுப்பியுள்ளார்.</p> <h3 style="text-align: justify;">ஆகஸ்ட் 17 முதல் புதிய நடைமுறை - Technical Requirements for Builders and Developers</h3> <p style="text-align: justify;">அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது; புதிய திட்டங்களில் மேற்கொள்ளப்படும் வீடு மற்றும் மனை விற்பனை பத்திரங்களை வரும் ஆகஸ்ட் 17-ஆம் தேதி முதல் கட்டாயமாக 'ஆன்லைன்' முறையில் மட்டுமே பதிவு செய்ய முடியும். பழைய 'மேனுவல்' முறையில் சார்பதிவாளர் அலுவலகங்களில் நேரடியாகச் சென்று பதிவு செய்ய அனுமதி அளிக்கப்பட மாட்டாது. இதன்படி, வீடு மற்றும் மனை வாங்குபவர்கள் சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனத்தின் அலுவலகத்தில் இருந்தபடியே பத்திரப்பதிவை முழுமையாகச் செய்து கொள்ள முடியும்.</p> <h3 style="text-align: justify;">அலுவலகங்களில் செய்ய வேண்டிய ஏற்பாடுகள் - Biometric Scanners, Iris Readers, and Webcam Specifications</h3> <p style="text-align: justify;">இந்த ஆன்லைன் பதிவு வெற்றிகரமாக நடைபெற கட்டுமான நிறுவனங்களின் அலுவலகங்களில் குறிப்பிட்ட சில தொழில்முறை வசதிகளை முன்கூட்டியே ஏற்படுத்த வேண்டும். பத்திரப்பதிவின் போது 'வெப் கேமரா' வாயிலாகப் புகைப்படம் எடுக்கும் இடத்தில், பின்னணித் திரை எந்தவித படங்களும் இன்றித் தெளிவாக இருக்க வேண்டும். மேலும், பதிவு செய்வோரைப் படம் பிடிப்பதற்கு ஏற்றவாறு தரமான 'வெப் கேமரா' வசதி அமைக்கப்பட வேண்டும்.</p> <p style="text-align: justify;">சொத்து விற்பவர் மற்றும் வாங்குபவரின் விரல் ரேகை, பயோமெட்ரிக் விவரங்களைப் பதிவு செய்யப் பதிவுத்துறை மென்பொருளுடன் ஒத்துப்போகக்கூடிய அதிநவீனக் கருவிகளை நிறுவ வேண்டும். அத்துடன், கருவிழிப் பதிவிற்கான சாதனங்கள் நவீன முறையில் தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். பத்திரப்பதிவு நடைபெறும் இடத்தில் குறைந்தபட்சம் 100 எம்.பி.பி.எஸ். (100 Mbps) வேகத்திலான இணையதள சேவை இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.</p> <p style="text-align: justify;">மேலும், பதிவுத்துறை இணையதளத்தில் 'லாக் இன்' செய்யப்படும் நுழைவு வசதியையும் முன்கூட்டியே முறைப்படுத்தி வைத்திருக்க வேண்டும்.கட்டுமான நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர்கள், நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் ஆகியவை இதற்கான வசதிகளை உரிய முறையில் ஏற்படுத்தி, இந்த ஆன்லைன் பத்திரப்பதிவு திட்டம் வெற்றிகரமாகச் செயல்பட முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks